பொய்கையாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம் + விக்கியாக்கம். குறுங்கட்டுரைச்சுட்டி அகற்றப்பட்டது.
வரிசை 1:
'''பொய்கையாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தைச்]] சேர்ந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் [[திருவந்தாதி]] எனப்படுகின்றது. முதன்முதலில் [[விஷ்ணு|விட்டுணுவின்]] பத்து அவதாரங்களையும் பாடியவர்.
 
==பாஞ்சஜன்ய அம்சம்==
 
சில ஆழ்வார்கள் [[திருமால்|திருமாலின்]] கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று [[வைணவம்]] நம்புகின்றது. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.
 
==முதலாழ்வார்கள்==
 
இவர் [[பேயாழ்வார்]], [[பூதத்தாழ்வார்]] எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.
 
==இறைவனின் நாடகம்==
 
இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்கக் கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில், இம்மூவரையும் ஒருங்கு சேர்த்துத்தானும் அவர்கட்கிடையில் நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான். நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில் கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.
 
==மூன்று திருவந்தாதிகள்==
 
அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே [[முதல் திருவந்தாதி]] (பொய்கையாருடையது), [[இரண்டாம் திருவந்தாதி]] (பூதத்தாருடையது), [[மூன்றாம் திருவந்தாதி]] (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.
 
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.divyadesamonline.com/alwars/poigai-alwar.asp பொய்கை ஆழ்வார், காஞ்சிபுரம்] {{ஆ}}
 
 
{{stub}}
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
[[en:Poigai Alvar]]
"https://ta.wikipedia.org/wiki/பொய்கையாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது