'''ஆர். சிவலிங்கம்''' ([[இணுவில்]], [[யாழ்ப்பாணம்]]) ''உதயணன்'' என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், நாவல்களைப் படைத்தவர்.
இவருடைய இரண்டு நாவல்கள் ''பொன்னான மலரல்லவோ'', ''அந்தரங்க கீதம்'' ஆகிய இரண்டு நாவல்கள் '[[வீரகேசரி]]ப் பிரசுரங்கள்' வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்பாளர். [[பின்லாந்து|பின்லாந்தின்]] தேசியக் காவியமான [[கலேவலா]] என்ற பாடல் தொகுப்பு இவரால் 1994இல் மொழிபெயர்க்கப்பட்டது. பல வருடங்களாக பின்லாந்தில் வாழ்ந்து வரும் இவர், பின்னிஷ் மொழியுடனும் பின்னிஷ் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், பின்னிஷ்-கரேலிய மூலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்துத் தர முடிந்தது.