வெங்கட் சாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:VenkatSwaminathan.jpg|right|thumb|framed|வெங்கட் சாமிநாதன்]]
{{stub}}
'''வெங்கட் சாமிநாதன்''' என்ற பெயரில் எழுதும் சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், அனுபவமும்விமர்சிக்கும் திறனும் கொண்டவர்.
 
இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதனூடாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்பட்டவர் வெங்கட் சாமிநாதன். துல்லியமான அந்தரங்க ரசனை கொண்ட சாமிநாதன் , [[நீல.பத்மநாபன்|நீல.பத்மநாபனின்]] 'தலைமுறைகள்' [[பூமணி | பூமணியின்]] 'பிறகு' போன்ற பல ஆக்கங்கள் சத்தமின்றி வந்தபோதே, கவனித்து முன்னிறுத்தியவர். அவரது கோணங்கள் பலவாறாக விவாதிக்கப்பட்டாலும் அவர் முன்னிறுத்திய ஆக்கங்கள் பொதுவான அங்கீகாரம் பெற்றன என்பது வரலாறு.
 
நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீனநாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிறகலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950லேயே வலியுறுத்தியவர் அவர்.
"https://ta.wikipedia.org/wiki/வெங்கட்_சாமிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது