சி. கணேசையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = சி. கணேசையர்
|image = Ganesaiyar.jpg
|caption = சி. கணேசையர்
|birth_name =
|birth_date = {{birth_date|1878|3|26}}
|birth_place = [[புன்னாலைக்கட்டுவன்]], [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]
|death_date = {{death_date and age|1958|11|8|1878|3|26}}
|death_place = [[வறுத்தலைவிளான்]], [[யாழ்ப்பாணம்]]
|death_cause = இயற்கை
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality =
|other_names =
|known_for =[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] மூன்று அதிகாரங்களுக்கு விளக்கக் குறிப்புகள் எழுதியமை
|education =
| religion= [[சைவ சமயம்]]
| spouse= அன்னலட்சுமி
|parents=சின்னையர்<br>சின்னம்மாள்
|}}
'''சி. கணேசையர்''' ([[ஏப்ரல் 1]], [[1878]] - [[நவம்பர் 8]], [[1958]]) [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவசிரோன்மணி என்ற பட்டம் பெற்றவர். [[சுன்னாகம்]] [[குமாரசாமிப்புலவர்|அ. குமாரசுவாமிப் புலவரின்]] மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். [[இலங்கை|ஈழத்தில்]] இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு) இவர் இமயம்போல் போற்றப்படுகிறார்.
 
வரி 8 ⟶ 29:
கணேசையரது குடும்பம் கற்றவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு விளங்கிற்று. இவருடய பெரிய தந்தையாரால் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர்முன்றலில் (சொந்த செலவில்) நடத்தப்பட்டுவந்த சைவப்பள்ளிக்கூடத்தில் ஐயர் எட்டாம் வகுப்புவரை கல்விகற்றார். இக்காலத்தில் இலக்கணம், இலக்கியம், சரித்திரம், சமயம், கணிதம் முதலிய பாடங்களில் முதன்மை பெற்றார். மேலும் இவரது பெரிய தந்தையாரிடமும் (வீட்டில்) தனிப்பட்ட முறையில் பாடங்கேட்டமை இவரை வகுப்பில் முதன்மாணவர் ஆக்கியது. அதன்பின் யாழப்பண நகரைச் சேர்ந்த [[வண்ணார்பண்ணை]]யில் வசித்து வந்த வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களின் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து இலக்கணத்தில் உயர்கல்வி கற்றார்.
 
பொன்னமபலப்பிள்ளையவர்கள் இறைபதம் அடைந்தபின்இறந்தபின் [[சுன்னாகம்]] [[சுன்னாகம் குமாரசாமிப்புலவர்|அ. குமாரசுவாமிப் புலவரிடம்]] சிலகாலம் கற்றுவந்தார். அவர்களிடம் இலக்கணத்தோடு வடமொழி அறிவும் பெற்றார். மேலும் தனது சந்தேகங்களிலிருந்து தெளிவுறுவதற்கான உசாத்துயைணைவராகவும் பாவித்து புலமை பெற்றார்.
 
== இல்லற வாழ்வு ==
தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியாகிய அன்னலட்சுமி அம்மையைத் திருமணஞ் செய்தார். அம்மையாரும் [[வடமொழி]], தென்மொழி அறிவுடையவர். நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர். அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. மனைவியார் இறந்தபின் ஐயர் அவர்கள் மனைவியார் அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு "அன்னலட்சுமி கூபகூபம்" மெனப்எனப் பெயரிட்டு [[வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயம்|வருத்தலைவிளான்வறுத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு]] அதனைத்அதனை தருமசாதனம் பண்ணியிருக்கிறார்கள். அவ்வாலயத்துக்கு முன்னே பல பேர், பலமுறை தீர்த்தக்கிணறு தோண்டுவிக்க முயன்றும் அவற்றில் நீரூறாமையால் அப்பணியைக் கைவிட்டிருந்தனர். ஐயர் வெட்டுவித்த கிணறும் நாற்பது அடிவரை அகழப்பட்டும் நீரூற்றிலது ஐயர் அவர்கள்,
 
ஆட்டாதே எங்கள் அரனார் திருமகனே
வரி 18 ⟶ 39:
காமுறுவேற் குள்ளம் கனிந்து
 
என்று பாடியும் பணிந்தும் விநாயகப் பெருமான் திருவடிகளை நம்பி, தம்பணியைத் தொடர்ந்து செய்து நீரூறக்கண்டு மகிழ்ந்தனர். அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உளதுஉள்ளது<ref name="mahajana">வித்துவ சிரோமணி பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம் - மகாஜனாக் கல்லூரி</ref>.
 
== இலக்கண - இலக்கியப்பணி ==
வரி 25 ⟶ 46:
கணேசையரவர்கள் அவர்தம் காலத்தில் இலக்கணப் புலமை – முதிர்ச்சி பெற்றிருந்தார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது.
 
“இன்றுவரை எமக்குக் கிடைத்த பழந்தமிழ் நூல்களிற் மிகத் தொன்மையானது தொல்காப்பியமென்னும் இலக்கண நூல். அது தமிழர்களின் நாகரிக வழக்க ஒழுங்குகளை ஆராய்வார்க்கு உறுதுணை பயக்கவல்லதோர் சீரிய நூல். அந்நூல் ஆக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே அதனுரைகள் ஆக்கப்பட்டன. அவ்வுரைகளும் ஆக்கப்பட்டுச் சில நூற்றாண்டுகள் கழிந்துவிட்டன. ஏட்டு வடிவிலிருந்த அந்நூலுரைகள் காலத்துக்குக் காலம் பெயர்த்தெழுதப்பட்டமையானும், விளங்குதற்கரியனவாயிருந்தமையானும் அவற்றுக்கண் பிழைகள் புகுந்து கற்பார்க்குப் பெரிதும் துன்பம் தந்தன. அவற்றைச் செம்மை செய்து பாதுகாக்க வேண்டுமென ஐயர் அவர்களுக்கு ஒரு பெருவிருப்பமுண்டாயிற்று. அந்நூலுரைகளைப் பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப மாணவர்களுக்குக் கற்பித்து வந்ததினால் ஐயர் அவர்களுக்குக் அவ்விருப்பத்தினை நிறைவேற்றுவதில் பெருஞ் சிரமம் ஏற்படவில்லை. ஏட்டுப் பிரதிகள் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதிவந்தனர். தாங்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டனர். அவற்றின் பதிப்பாசிரியர் ஈழகேசரி நா. பொன்னையா அவர்களாகும். முற்கால நூலுரைகளைக் கற்பித்தலில் கஷ்டமுற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஏனைய அறிஞர்களும், மாணவர்களும் அவற்றை மிக்க விருப்பத்தோடும் வரவேற்று ஆதரவு கொடுத்தனர். தொல்காப்பியமாகிய பெருங்கடலிற் புகுவோர்க்கு ஐயர் அவர்களின் குறிப்புக்கள் மரக்கலம் போல உதவுவன. ஐயர் அவர்கள் செய்த தொண்டுகளில் மிக உயர்ந்ததாகக் கருதத்தக்கது இத்தொண்டேயாகும்”<<ref>வித்துவ சிரோமணிname="mahajana" பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம்</ref>.
 
“ஐயரவர்கள் தனது இளவயதிலேயே தொல்காப்பியத்தினுள் துணிந்து பிரவேசிக்க காரணம் அவர் பெற்ற இலக்கணக் கல்வியும் தேடலுமேயாகும். இவரது தொல்காப்பிய பதிப்புகள் (எழுத்ததிகாரம் – 1937, சொல்லதிகாரம் – 1938, பொருளதிகாரம் இரண்டாம் பகுதி – 1943, பொருளதிகாரம் முற்பகுதி – 1948) வெளிவந்ததும் ஈழத்திருநாடின் இலக்கியப் புகழும், ஐயரவர்களின் திறமும் தமிழ்நாடு எங்கணும் பரவி வியாபித்தது. ‘தொல்காப்பியக்கடல்’ என்றும், ‘ஈழத்து இலக்கிய ஞான்று’ என்றும் ஐயரவர்கள் அக்காலத்தில் பலவாறாகப் புகழ்ந்துரைக்கப்பட்டார்”. – சிவலிங்கராஜா-
வரி 171 ⟶ 192:
தெய்வப் புலவரின் நாவுணர்ச்சி
1951 – 1952 இராமவதாரத்திற் கவிநயம்
 
தகவல் - சிவலிங்கராஜா.எஸ். வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்க்கையும் பணியும் –
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />
 
==உசாத்துணை==
தகவல்* -சிவலிங்கராஜா, சிவலிங்கராஜா.எஸ்., வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்க்கையும் பணியும்
 
==வெளி இணைப்புகள்==
வரி 181 ⟶ 203:
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சி._கணேசையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது