சனமேசயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: right|thumb|300px| சனமேசயனும் தம்பியரும் பேரரசன் '''சனமே...
 
மேலதிக தொகுப்பு
வரிசை 1:
[[Image:00005 Janamejaya and brothers.jpg|right|thumb|300px| சனமேசயனும் தம்பியரும்]]
பேரரசன் '''சனமேசயன்''' ([[சமஸ்கிருதம்]]: जनमेजय) இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பரீட்சித்து]] மன்னனின் மகனும், [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் பாண்டவர்களுள் ஒருவனான [[அருச்சுனன்|அருச்சுனனின்]] கொள்ளுப்பேரனும் ஆவான். பரீட்சித்து மன்னன் இறந்த பின்னர் குரு வம்சத்தின் வாரிசாக இவன் அரியணையில் அமர்ந்தான். [[வியாசர்|வியாச]] முனிவரின் மாணவனான [[வைசம்பாயனர்|வைசம்பாயனரால்]] பாரதக்கதை இவனுக்குச் சொல்லப்பட்டது என்பதனால் இவன் முக்கியத்துவம் பெறுகிறான்.
 
==மகாபாரதம்==
மகாபாரதத்தில், சனமேசயனுக்கு ஆறு தம்பியர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள், காக்சசேனன், உக்கிரசேனன், சித்திரசேனன், இந்திரசேனன், சுசேனன், நாக்கியசேனன் என்போராவர். மகாபாரதத்தின் தொடக்கப் பகுதிகளில் சனமேசயனின் வாழ்க்கை தொடர்பான பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் தக்சசீலத்தைக் கைப்பற்றியதும், தக்சகன் என்னும் நாகத்துடனான சண்டையும் அடங்குகின்றன. இவனது தந்தையான பரீட்சித்துவின் இறப்புக்குத் தக்சகன் காரணமாக இருந்ததால், அவன் நாக இனத்தையே அழிப்பதில் குறியாக இருந்தான்.
 
அதற்காக ''சர்ப்ப சத்ரா'' என்ற வேள்வியை நடத்த ஏற்பாடுகள் செய்கிறான்.நாக அரசன் தக்சகனை கொல்கிறான். அவனது அமைச்சரும் ஞானியுமான அஸ்திகா அவனது வெறித்தனமான பாம்புகள் அழிப்பை தடுக்கிறார்.அப்போது அங்கு வரும் வியாசர், , ஒரு சாபத்தினை நிறைவேற்றவேண்டி ஒருவர் இயற்றிய செயலுக்காக, அந்த இனத்தவரையே அழிப்பது அறமாகாது என்றும் பாண்டவர் வழித்தோன்றலுக்கு இது அழகல்ல எனவும் எடுத்துச் சொல்ல, வேள்வியை கைவிடுகிறான். தனது முன்தாதையர்கள் பற்றி அறிய விரும்பிய ஜயமேஜயனுக்கு, வியாசர் தனது சீடர் வைசம்பாயனரிடம் மகாபாரதக்கதையை அதே வேள்வி நடக்கவிருந்த இடத்தில் சொல்லப்பணிக்கிறார்.
 
 
 
{{மகாபாரதம்}}
 
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]
 
[[en:Janamejaya]]
"https://ta.wikipedia.org/wiki/சனமேசயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது