வில்லுப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fr:Villuppattu; cosmetic changes
வரிசை 2:
'''வில்லுப்பாட்டு''' (அல்லது '''வில்லிசை''') என்பது [[தமிழர் கலைகள்|தமிழர் கலை]] வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு ''வில்லுப்பாட்டு'' எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: [[உடுக்கை]], [[குடம்]], [[தாளம்]], கட்டை என்பனவாகும்.
 
== வில்லுப்பாட்டின் தோற்றம் ==
வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்த காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது.
 
== வில்லுப்பாட்டின் அமைப்பு ==
வில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாக வகுக்கலாம்:
 
=== காப்பு விருத்தம் ===
இறைவணக்கம் செய்தல் [[தமிழர்]] மரபாகும். அந்த முறையில் வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும் இது [[விருத்தம்|விருத்த]]மாக அமையும்.
 
=== வருபொருள் உரைத்தல் ===
குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும். இதனை ''நுதலிப்பாடுதல்'' எனவும் கூறுவர். இது பாடலாக அமையப்பெறும்.
 
=== குருவடி பாடுதல் ===
தனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது ''குருவடி பாடுதல்'' எனப்படுகிறது.
 
=== அவையடக்கம் ===
கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது ''அவையடக்கம்'' ஆகும். பிழை நேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும்.
 
=== நாட்டு வளம் ===
கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.
 
=== கதைக்கூறு ===
நாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தலைவன், தலைவியரின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.
 
=== வாழிபாடுதல் ===
இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை ''வாழிபாடுதல்'' என்பது.
 
== வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் ==
 
* [[தோவாளை சுந்தரம் பிள்ளை]]
வரிசை 37:
* [[குலதெய்வம் இராஜகோபால்]]
* [[யாழ்ப்பாணம் சின்னமணி]]
* [[உடப்பு பெரி. சோமாஸ்கந்தர்]]
* கலைமாமணி [[சுப்பு ஆறுமுகம்]]
* [[திருப்பூங்குடி ஆறுமுகம்]]
வரிசை 44:
* கலைமாமணி [[விளாத்திகுளம் இராஜலட்சுமி]]
* [[சங்கரன்கோவில்]] சண்முகத்தாய்
* [[திருநெல்வேலி]] புலிக்குட்டிப்புலவர்
* இராமநாதபுரம் [[செ.வேலுக்கோனார்]]
* [[உடுப்பிட்டியூர் யோகன்]] [[உடுப்பிட்டியூர் வானம்பாடிகள்]]
 
== உசாத்துணை ==
* ''தோட்டுக்காரி'', முனைவர் வ. அலமேலு, [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]], [[சென்னை]], [[1995]]
 
== வெளி இணைப்பு ==
* [http://noolaham.net/library/books/03/288/288.pdf வில் பிறந்த கதை - இராஜம் புஷ்பவனம்] ([[நூலகம் திட்டம்]])
* [http://wandererwaves.blogspot.com/2007/09/blog-post_22.html யாழ்ப்பாணம் சின்னமணியின் வில்லுப்பாட்டு இணையத்தில்]
 
 
[[பகுப்பு:வில்லிசை|*]]
 
 
[[en:Villuppattu]]
[[fr:Villuppattu]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லுப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது