30 சூன் 1912 அன்று [[திருநெல்வேலி]]யில் பிறந்தார். அவருடன் கூடப்பிறந்தோர் எண்மரில் கிருட்டிணனே கடைக்குட்டி. அவர் தந்தை '''[[அ. மாதவையா]]''' ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக ஆர்வலருமாவார்.
==படிப்பு==
தொடக்கப்படிப்பை கிருட்டிணன் [[இந்து மேல்நிலைப்பள்ளி|இந்து உயர்நிலைப்பள்ளி]]யில்உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பள்ளியிலேயே அவரது ஆர்வம் இலக்கியத்திலும் கலையிலும் இயற்கையின் மேலும் இருந்தது. [[1927]] இல் அவர் [[மாநிலக் கல்லூரி]]யில்கல்லூரியில் சேர்ந்து பின்னர் [[1931]] இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்கு பணிபுரிந்து வந்த '''"பைசன்'''" என்ற [[தாவரவியல்]] பேராசிரியர் அவரை வெகுவாகக் கவர்ந்தார். அவருடன் இணைந்து [[நீலகரி|நீலகிரிப்பகுதிக்கும்நீலகிரி]]ப் பகுதிக்கும், [[கொடைக்கானல்|கொடைக்கானலுக்கும்]] களப்பயணங்கள் மேற்கொண்டார்.
==எழுத்து==
சிறு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதியும் படங்கள் கேலிச்சித்திரங்கள் வரைந்தும் சில காலம் பிழைப்பை நடத்தினார் கிருஷ்ணன். அவரது கட்டுரைத்தொகுப்பு அண்மையில் [[தியோடர் பாசுகரன்|தியோடர் பாசுகரனின்]] தொகுப்பில் வெளிவந்தது. <ref>தியோடர் பாசுகரன் (தொகுப்பாசிரியர்) (2002) மழைக்காலமும் குயிலோசையும். மா.கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் (காலச்சுவடு பதிப்.)</ref>. கிருஷ்ணனின் [[வனவுயிரிப் புகைப்படவியல்]] குறித்த கட்டுரைகள் [[தி இல்லசுடிரேடட் வீக்லி ஆவ் இந்தியா]]வில் வெளிவந்தன. பின்னர் Z என்ற புனைப்பெயரில் '''தி[[த இந்து''']] நாளிதழில் எழுதி வந்தார். <ref>[[http://en.wikipedia.org/wiki/Madhaviah_Krishnan#Writing ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை]]</ref>. [[1950]] லிருந்துஇலிருந்து பெப்ருவரி 18, [[1996]] அன்று அவர் இறப்பு வரையிலும் [[கோல்கத்தா|கோல்கத்தாவிலிருந்து]]விலிருந்து வெளிவரும் [[தி இசுடேட்சுமன்]] நாளிதழில் தொடர்ந்து வாரமிருமுறை '''கண்ட்டிரி நோட்டுபுக்''' என்ற தலைப்பில் இயற்கை வரலாறு பற்றி எழுதி வந்தார் கிருஷ்ணன். <ref>[[http://www.hinduonnet.com/thehindu/mag/2003/07/20/stories/2003072000130300.htm இந்துவில் ராமசந்திர குகாவின் கட்டுரை]]</ref>.
==இயற்கை சார்ந்து கிருட்டிணனின் பணி==
ஒரு [[சூழலியல்]] பாதுகாவலராகவே இருந்து வந்த கிருட்டிணன், அயல்நாட்டின மரங்கள் நம் நாட்டில் வளர்க்கப்படுவதைத் தீவிரமாக எதிர்த்தார். [[அமெரிக்கக்கண்டம்அமெரிக்காக்கள்|அமெரிக்கக்கண்ட]] இறக்குமதியான [[டபேபிவியா]](''Tabebuia'') மரம் மஞ்சள் பூக்களுடன் பூத்துக்குலுங்கிய காட்சியை அவர் கண்டதும் வெகுண்டார். ''"இந்தக் காட்சி நமக்கெல்லாம் ஓர் இழுக்கு''" என்று கூறிய கிருஷ்ணன், அம்மரங்களையெல்லாம் பிடுங்கியெறிந்து விட்டு அவ்விடத்தில் இந்திய மண்ணின் மரங்களை நட வேண்டும் என்றாராம். <ref>[[http://en.wikipedia.org/wiki/Madhaviah_Krishnan#Natural_history ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை]]</ref>.