பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
[[File:The capture of the king of delhi by Captain Hodson.jpg|right|220px|thumb|20 செப்டெம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் சா சஃபாரும், மகன்களும் உமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஒட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.]]
[[Image:Bahadur Shah Zafar.jpg|thumb|300px|left|1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.]]
1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகம் விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர். இந்துக்கள், முசுலிம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், சஃபாரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கலகத்தை ஆதரித்த அரசர்களும், கலகக் காரப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தனியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக சஃபாரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தன.<ref>http://www.tribuneindia.com/2007/20070510/1857/main1.htm</ref> சஃபார் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.
 
இக் கலகம் தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது சஃபார் அவரது மக்கள் இருவருடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த [[உமாயூனின் சமாதி]]க் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டெம்பர் 20 ஆம் தேதி தளபதி [[வில்லியம் ஒட்சன்]] தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு சஃபாரைச் சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஒட்சன், சஃபாரின் ஆண்மக்களான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை [[தில்லி நுழைவாயில்|தில்லி நுழைவாயிலுக்கு]] அருகின் உள்ள [[கூனி தர்வாசா]] என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.
வரிசை 43:
சஃபாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண் உறுப்பினர்கள் பிரித்தானியரால் கொல்லப்பட்டனர். தப்பியிருந்த முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பலர் [[சிறை]]யில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1858 ஆம் ஆண்டில், சஃபாரும், அவரது மனைவி சீனத் மகலுடனும், குடும்பத்தின் எஞ்சியவர்களுடனும் பர்மாவில் (இப்போது மியன்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இது, இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்ட முகலாய வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 
பகதூர் சா நாடுகடந்த நிலையில் 1862 நவம்பர் 7 ஆம் தேதி ரங்கூனில் காலமானார். இவரது உடல் ரங்கூனில் உள்ள [[சுவேதாகன் பகோடா]]வுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது இப்போது [[பகதூர் சா தர்கா]] என அழைக்கப்படுகின்றது.<ref>[http://www.kapadia.com/Dargah/zafrdarg.html The Dargah of Bahadur Shah Zafar in Rangoon.]</ref> இவரது மனைவி சீனத் மகல் 1886 ஆம் ஆண்டு காலமானார்.<ref>[http://www.kapadia.com/zeenatmahal.html Nawab Zeenat Mahal]</ref>
 
 
==குறிப்புகள்==
<References/>
 
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/பகதூர்_சா_சஃபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது