சம்சுத்தீன் இல்த்துத்மிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
 
==இளமைக் காலம்==
சம்சுத்தீன் துருக்கிசுத்தானில் உள்ள இல்பாரி என்னும் [[பழங்குடி]]யைச் சேர்ந்தவர். இவர் இளம் வயதில் மிகவும் அழகானவராகவும், மிகுந்த அறிவுத்திரன்அறிவுத்திறன் கொண்டவராகவும் இருந்தார். இதனால் இவர்பால் பொறாமை கொண்ட இவரது உடன்பிறந்தோர் இவரை அடிமையாக விற்றுவிட்டனர். இவரது இயல்புகளின்பால் கவரப்பட்ட தில்லியின் சுல்தான் குதுப்புத்தீன் ஐபாக் இவரைக் கூடிய [[விலை]] கொடுத்து வாங்கினார். அரச சேவையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற சம்சுத்தீன், குதுப்புத்தீனின் மகளையும் மணம் செய்துகொண்டார். இவர் [[குவாலியர்|குவாலியரிலும்]], பாரானிலும் ஆளுனராக இருந்தார் பின்னர் தில்லி சுல்தானகத்தின் அட்சிப்பொறுப்பு ஏற்கும்வரை, 1206 முதல் 1211 ஆம் ஆண்டுவரை பாதுவானின் ஆளுனராக இருந்தார்.
 
===அதிகாரத்துக்கு வருதல்===
கிபி 1210 ஆம் ஆண்டில் குதுப்புத்தீன் ஐபாக் இறந்தார். அவருக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அவரது மகன் அராம் சாவின் திறமையின்மையால் துருக்கப் பிரபுக்களின் வெறுப்புக்கு ஆளானார். இப் பிரபுக்கள் அராம் சாவைப் பதவியிலிருந்து அகற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு சம்சுத்தீனைக் கேட்டுக்கொண்டனர். பதவியேற்றபோது இவருக்கு "அல்த்முசு" என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. இப்பெயர் இல்த்மாசு அல்லது இல்த்துத்மிசு எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. [[துருக்க மொழி]]யில் இது "அறுபது"எனப் பொருள்படும். பதவியேற்கும்போது அவருக்கு 60 [[வயது]] ஆனபடியால் இப்பெயர் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 
===தொடக்ககாலச் சவால்கள்===
இல்த்துத்மிசு பதவியேற்ற பின்னர், அவர் பல சவால்களை எதிர்நோக வேண்டி இருந்தது. உச், முல்த்தான் ஆகிய பகுதிகளுக்கு ஆளுனராக இருந்த [[நசிருத்தீன் கபாச்சா]], [[லாகூர்|லாகூரைப்]] பிடித்து வைத்துக்கொண்டு தனியரசு நடத்த முயன்றார். [[காசுனி]]யின் சுல்தான், [[தாசுத்தீன் யல்டோசு]] தில்லியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்தார். குதுப்புத்தீனால் [[வங்காளம்|வங்காளத்தின்]] ஆளுனராக நியமிக்கப்பட்ட [[கால்சி]]ப் பிரபுவான அலி மர்தான், தன்னைச் சுல்தான் அலாவுத்தீன் என அறிவித்துக் கொண்டார். அவருக்குப் பின் வந்த [[கியாசுத்தீன்]], பீகாரைக் கைப்பற்றிக் கொண்டான். இந்து இளவரசர்களும், தலைவர்களும் தமது சுதந்திரம் பறிபோனதையிட்டுக் குமுறிக்கொண்டிருந்தனர். [[கானாவூச்]], [[பெனாரசு]], குவாலியர், [[காலிஞ்சர்]] போன்ற அவர்களது பகுதிகள் குதுப்புத்தீனால் கைப்பற்றப்பட்டு இருந்தன. சௌகான்கள், அராம் சாவின் காலத்தில் [[ரந்தாம்பூர்|ரந்தாம்பூரை]] மீளக் கைப்பற்றிக் கொண்டனர். இல்த்துத்மிசின் பிரச்சினைகளை மேலும் கூட்டும் வகையில், தில்லியின் அமீர்களில் சிலரும் அவரது ஆட்சிக்கு எதிராக இருந்தனர்.
 
[[பகுப்பு:தில்லி சுல்தானகம்]]
"https://ta.wikipedia.org/wiki/சம்சுத்தீன்_இல்த்துத்மிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது