அனகாரிக தர்மபால: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 5:
==வரலாறு==
இவரது இயற்பெயர் ''டொன் டேவிட் ஹேவாவிதாரண''. தந்தையார் [[டொன் கரோலிஸ் ஹேவாவிதாரண]], தாயாரின் கன்னிப் பெயர் ''மல்லிகா தர்மகுணவர்த்தன''. அப்போது இலங்கை பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்தது. பெரும்பாலான பாடசாலைகள் கிறிஸ்தவப் பாடசாலைகளாகவே இருந்தன. டொன் டேவிட்டும் ஒரு கிறிஸ்தவப் பாடசாலையிலேயே கல்வி பயின்றார். முதலில் கோட்டேயிலிருந்த [[கிறிஸ்தவக் கல்லூரி, கோட்டே|கிறிஸ்தவக் கல்லூரி]]யிலும் பின்னர் கொழும்பு அக்கடமியிலும் பயின்றார். அப்போது, இலங்கையில், தேசிய உணர்வு தலை தூக்கத் தொடங்கியது. இலங்கையின் [[வடக்கு]], [[கிழக்கு]]த் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் புத்த மதத்துக்குச் சார்பான நிலைமைகள் தோன்றின. 1875 ஆம் ஆண்டு நியூ யார்க்கில், [[ஹென்றி ஸ்டீல் ஒல்கொட்|கர்னல் ஒல்கொட்]] எனபவரும், [[பிலவத்ஸ்கி அம்மையார்|பிலவத்ஸ்கி அம்மையாரும்]], [[பிரமஞான சபை]]யை (Theosophical Society) நிறுவினர். அவர்கள் இருவரும், புத்த மதத்தின்பால் ஈர்ப்புக் கொண்டிருந்தனர். 1880 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த அவர்கள் தங்களைப் பௌத்தர்களாக அறிவித்துக் கொண்டனர். ஒல்கொட் அடிக்கடி இலங்கைக்கு வந்து பௌத்த கல்வி வளர்ச்சிக்குத் தொண்டாற்றினார். இவர் 300 பௌத்த பாடசாலைகள் வரை நிறுவினார். இவற்றுட் சில இன்றும் உள்ளன. இளைஞனாக இருந்த தர்மபால, ஒல்கொட்டின் பணிகளில் உதவி வந்தார்.
==தர்மபாலவின் சமயத் தொண்டு==
|