காரை சுந்தரம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 172:
:''சுந்தரம் பிள்ளை அரங்குகளில்''
:''சொல்லும் கவியிற் சுழன்றுவரும்''
:''சந்தம் கருத்து சபைகவரும்''
:''தக்கோர் தலைகள் அசைந்தாடும்''
 
;கவிஞர் சோ.பத்மநாதன்:
 
:''காரை என்ற புனைபெயர் தாங்கியே''
:''கவிதை வானில் எறித்த முழுநிலா''
:''ஊரைத் தன்னெழுத் தூழியத் தால்தமிழ்''
:''உலகெல்லாம் நிலை நாட்டிய உத்தமன்''
:''ஆர வாரமற்(று) ஆய்வுகள் செய்தவன்''
:''அநுப வஸ்த்தன் ஆசிரியர் நடுவன்ஓர்''
:''தாரகை எனப் போற்றிடத் தக்கவன்''
:''தமிழ ரானவர் முதுசொம்நம் சுந்தரம்''
 
''நாட்டுக் கூத்துக்கள் ஆடி நயந்தவன்''
:''நாடகத்தின் வளங்கள் அறிந்தவன்''
:''ஏட்டில் கூத்துப் பழக்கும் அண்ணாவியார்''
:''இரவெ லாம்மத் தளத்தொ டிசைத்திடும்''
:''பாட்டில் நெஞ்சைப் பறிகொடுத் துப்பல''
:''பாத்திரங்களை ஆட்டிப் படைத்தவன்''
:''வாட்டும் நோய்தரு வாதையினூடும் நம்''
:''மலைய கத்தவர் கூத்தை ஆராய்ந்தவன்''
 
;கவிஞர் காசி ஆனந்தன்:
 
:''பல்துறை ஆற்றலன் அறிஞன்''
:''பாவலன் இலக்கியன் ஆசான்''
:''சொல்வளம் மிக்கவன் தமிழன்''
:''சுவைதோய்ந்து நின்றவன் கலைஞன்''
:''தொல் தமிழ்க்கூத்தினை ஆராய்ந்தோன்''
:''தொய்வறியாத் தமிழ்த் தொண்டன்''
:''நல்லவன் மடிவதோ எங்கள்''
:''நாடிதைத் தாங்குமோ அம்மா''
 
==உசாத்துணை நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காரை_சுந்தரம்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது