[[படிமம்:Parable of talents.jpg|thumbnail|250px|right|<center>எசமானிடம் கணக்கு கொடுத்தல்</center>]]
'''தாலந்துகள் உவமை''' என்பது இயேசு சொன்ன சிறு கதைகளில் ஒன்று. கடவுள் ஒவொருவருக்கும்ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொருள் பட இக்கதையை மக்களுக்கு கூறினார். இறைவன் அளித்த திறமைகளை சரியாக பயன்படுத்துவோர்க்கு இறைவன் அவற்றை மேலும் வழங்குவான். அவற்றை பயன்படுத்தாதவர்களிடம் உள்ள திறமை மங்கி போகும் என்னும் பொருள் பட இயேசு கூறிய "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாக குறிப்பிடலாம். இது புனித் விவிலியத்தில் [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது.