தலைப்புப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
இன்றைய தமிழ் நூல்கள் அனைத்துலக வழிமுறைகளைப் பின்பற்றியே பதிப்பிக்கப் படுவதனால் பிற மொழி நூல்களைப்போலவே தமிழ் நூல்களின் தலைப்புப் பக்கங்களும் அமைகின்றன. எனினும் 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் சிலவற்றிலுள்ள தலைப்புப் பக்கங்களின் அமைப்பும், எழுதப்பட்டுள்ள முறைகளும் கவனிக்கத்தக்கவை.
1918 ஆம் ஆண்டில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பதிப்பிக்கப்பட்ட [[யாழ்ப்பாண வைபவ கௌமுதி]] என்னும் தமிழ் நூலில் தகவல்களின் அமைவிடங்கள் தற்போதைய முறையை ஒட்டியே காணப்படுகின்றன. ஆனால், பக்கத்தின் மேற்பகுதியில்
: "இது வண. சா. ஞானப்பிரகாசர் (O.M.I) கனம் C.D.வேலுப்பிள்ளை (போதகர்) மெஸ். குமாரசுவாமி (கிளாக்கு) என்பவர்களின் பேருதவி கொண்டு வசாவிளான் சுதேச நாட்டிய மானேசர் மெஸ். க. வேலுப்பிள்ளை என்பவராலியற்றப்பட்டு தமது ஜயசிறீ சாரதா பீடேந்திர சாலையில் முத்திரீகரணஞ் செய்விக்கப்பட்டது"
வரிசை 37:
[[படிமம்:Manaiyadi_Sasthiram-Cover-Title_Pages.jpg|thumb|200px|சென்னையில் வெளியிடப்பட்ட மனையடி சாஸ்திரம் என்னும் தமிழ் நூலின் அட்டையும், தலைப்புப் பக்கமும் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளது. இரண்டிலும் ஏறத்தாழ ஒரே தகவல்களே இருக்கின்றன.]]
அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் இத் தலைப்புப் பக்கம் ஏறத்தாள நூலின் அட்டையை ஒத்துள்ளது. எழுத்துப் பகுதியைச் சுற்றியுள்ள பெட்டி கூடுதல் அலங்காரத்துடன் இருப்பதும், அட்டையில் பிள்ளையார் சுழி, "கடவுள் துணை" என்பனவும், "மயனென்பவர் அருளிச்செய்த" என்ற தொடர் இல்லாமல் இருப்பதுவுமே வேறுபாடு ஆகும்.
|