விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆன்மீகம்: move stuff to talk page
வரிசை 11:
 
==ஆன்மீகம்==
 
'''சைவ சமய உண்மைகள்'''
 
திருவாவடுதுறை ஆதீன வித்வான்
 
'''சைவத்திரு. வி.சிதம்பரராமலிங்க பிள்ளை '''
 
 
 
'''க'''
 
கடவுளும், உயிர்களும், உயிரறிவை மறைத்து நிற்கும் தடைப்பொருள்களும் என்றும் உள்ளன (கடவுள் - பதி, உயிர்கள் - பசு, தடைப்பொருள் - பாசம்)
 
'''உ'''
கடவுள் சிவபெருமான் ஒருவரே. அவர் எல்லா அறிவும் எல்லா முதன்மையும் எல்லா அனுக்கிரகமும் இயல்பாகவுடைய அதிபரிசுத்தர்.
 
'''ங'''
 
உயிர்கள் எண்ணிறந்த பல. அவ்வுயிர்கள் பலவேறு வகைப்பட்ட சிற்றறிவும் பரதந்திரமும் கடவுள் அனுக்கிரகமின்றி அமையாமையும் இயல்பாகவுடையனவாய்ச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்பன.
 
'''ச'''
 
உயிரறிவை மறைத்து நிற்கும் தடைப்பொருள்கள் ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றுமாம். அவற்றுள் ஆணவம் நெல்லில் உமி போன்றும் செம்பிற் களிம்புபோன்றும் உயிரின் குற்றமாய் உடன்தோன்றி நிற்பது. இருள் ஒன்றேயாயினும் பல கண்களையும் மறைத்து நிற்பதுபோல ஆணவம் ஒன்றேயாயினும் பல கண்களையும் மறைத்து நிற்பதுபோல ஆணவம் ஒன்றேயாயினும் பல உயிர்களின் அறிவையும் மறைத்து நிற்கும். கன்மம், உயிர்கள் தானென்னும் முனைப்போடு மனம் வாக்குக் காயமென்னும் மூன்றாலும் செய்யுந் தொழில். மாயை ஆடையிற் படிந்த அழுக்கை நீக்குதற்கு ஆடையிற் செறிக்கப்படும் உவர் போல, உயிரிற் படிந்த ஆணவத்தடை நீக்குதற்கு உயிரிற் செறிக்கப்பட்டது.
 
'''ரு'''
 
சிவபெருமான் அநாதியே ஆணவத்திலே அழுத்திக் கிடந்த உயிர்கள்மேல் வைத்த பெருங்கருணையாலே சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகமென்னும் ஐந்து தொழில்களையும் செய்தருளுவர். அவற்றுள் சிருஷ்டியென்பது உயிர்கட்கு அவற்றின் கர்மத்துக்கு ஏற்ப மாயையிலிருந்து சரீரம் உலகம் முதலியவற்றை உண்டாக்கிக் கொடுத்தல். திதி யென்பது அங்ஙனம் உண்டாக்கப்பட்ட சரீரம் உலகம் முதலியவற்றைப் பாதுகாத்தல். சங்காரமென்பது அச்சரீரம் உலகம் முதலியவற்றை மாயையின் ஒடுக்குதல். திரோபவமென்பது உயிர்கள் தாம் செய்த வினைப் பயன்களை அனுபவிக்கும்படி செய்தல். இது திதி நிகழும்போது நடைபெறுவது அனுக்கிரகமென்பது உயிர்களுக்கு ஆணவம் கன்மம் மாயை யென்னும் மூன்று தடைகளையும் நீக்கிப் பேரின்பங் கொடுத்தல். இது சங்காரம் நிகழும்போது நடைபெறுவது.
 
'''சா'''
 
உயிர்கள் தமக்குக் கிடைத்த சரீரத்தின் உதவியால் இவ்வுலகத்திலே நல்வினை தீவினைகளைச் செய்யும். இவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை முறையே சுவர்க்கத்திலும் நரகத்திலும் அனுபவிக்கும். பின்னர் மறுபடியும் அவை (எஞ்சிய) கர்மத்திற்கேற்ப இவ்வுலகிற் பல பிறவிகளிற் பிறக்கும். இங்ஙனம் உயிர்கள் மாறிமாறிப் பிறந்தும் இறந்தும் வரும். உயிர்களுக்குக் கிடைக்கும் பிறவிகள் பலவற்றுள்ளும் மக்கட் பிறப்பே முத்தியின்பம் பெறுதற்குக் கருவியாதலால் மிகச்சிறந்தது.
 
'''எ'''
 
மனிதப் பிறப்புப் பெற்றவர்கள் முன் பல பிறவிகளை யெய்தினமை காரணமாகச் சிறிது சிறிது அறிவு விளக்கம் பெற்றுப் படிப்படியாகப் பல வேறு வகைப்பட்ட மதங்களிலே நின்று அவ்வநூல்களின் விதித்தபடி ஒழுகுவர்: அவ்வாறு ஒழுகிய புண்ணியவிசேடத்தால் மேலான சைவசமயத்திற்புகுந்து வேத சிவாகமங்களில் விதித்தபடி ஒழுகுவர்.
 
'''அ'''
 
வேத சிவாகமங்களிலே விதிக்கப்பட்ட சாதனங்கள் சரியை கிரியை யோகம் ஞானமென நான்காம். அவற்றுள் சரியையாவது ஒழுக்க நெறியிலே நின்று சிவபெருமானைச் சரீரத்தால் வழிபடுதல்: கிரியையாவது ஒழுக்க நெறியிலே நின்று சிவபெருமானைச் சரீரத்தாலும் மனத்தாலும் வழிபடுதல்: யோகமாவது ஒழுக்க நெறியிலே நின்று சிவபெருமானை மனத்தால் வழிபடுதல்: ஞானமாவது சிவபெருமானை அறிவால் வழிபடுதல்.
 
 
சரீயை கிரியை யோக நிலைகளிலே நின்று சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்தலே சிவபுண்ணியமாம். இச்சிவ புண்ணியத்தால் யான் இன்ன நல்வினைசெய்தேன் எனக்கு இன்னார் தீவினை செய்தார் என்னும் நினைப்பு நீங்குதலாகிய இருவினைச் சமபுத்தியுண்டாகும். இச்சமபுத்தியால் அகங்காரம் கெட ஆணவ அழுக்கு நீங்கும் பருவம் வரும். அப்பருவத்தில் சிவபெருமானுடைய திருவருள் ஆன்மாவினிடம் விசேஷமாகப் பதியும். அச்சமயம் சிவபெருமானே குருவாக எழுந்தருளி வந்து ஞானோபதேசம் செய்வர்.
 
'''ய'''
 
அவ்வாறு ஞானோபதேசம் பெற்ற உயிர் அவ்வுபதேச நெறியை உறுதியாகக்கொண்டு சிவபெருமானைத் தன்னுள்ளே சிவோகம்பாவனை செய்து நாடும். அங்ஙனம் நாடிய காலத்து மாயா காரியமாகிய உலகப் பொருள் முதலியவற்றின் நிலையாமை கண்டு, உயிர் அவற்றினின்று நீங்கவே, அவ்வுயிர்க்குச் சிவபெருமானுடைய ஞானசொரூபம் விளங்கும். இவ்வித ஞான சொரூப விளக்கம் நிலைபெறுதற்கு வேண்டப்படுவன சிவாலயத்தையும் சிவனடியார்களையும் சிவனெனவே கண்டு வழிபடுதலும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை விதிப்படி உச்சரித்தலுமாம்.
 
'''யக'''
 
ஞானசொரூப விளக்கம் நிலைபெற்ற உயிர், முன் பாசத்தோடு கட்டுண்ட காலத்துச் சிவபெருமானை வேறு காணாது நின்ற நிலைபோல இப்பொழுது தன்னை வேறு காணாது சிவபெருமானோடு ஒற்றுமைப்பட்டு அவரருளாலல்லது ஒன்றையும் செய்யாது நிற்கும். அவ்வாறு நிற்கும் உயிர் சிவபெருமான் தன்னோடு அநாதியே இரண்டறக் கலந்து நின்று கருணையால் உபகரித்து வரும் உரிமையை நோக்கி நோக்கி, அப்பெருமானிடத்துப் பேரன்பு முறுகி வளரப்பெறும். இதுவே ஞானத்தின் முடிவான நிலை.
 
'''யஉ'''
 
இவ்வித ஞானநிலை அடைந்தவர்களே சிவஞானிகள். அவர்களிடம் ஆணவம் வறுத்த வித்துப்போற் பயனற்றுக் கிடக்கும். ஆணவம் பயனற்றுக் கிடப்பவே தானென்னும் முனைப்பில்லாமையால் கர்மம் இல்லை. இவை இல்லாமையால் மாயையும் அவர்களுக்கு வேண்டப்படுவதில்லை. ஆகவே சிவஞானிகள் ஆணவம் கர்மம் மாயை யென்னும் மூன்று தடைகளும் அவற்றின் வாசனையும் நீங்கி, அறிவு முழுவதும் விளங்கப்பெற்று, எல்லாம் சிவமயமாகக் கண்டு, சிவபெருமானாற் கொடுத்தருளப் பெறும் பேரானந்தத்திலே அழுந்தி ஆனந்தமயமாயிருப்பார்கள். இதுவே மோக்ஷ நிலை.
 
== கலைகள் ==