[[Image:Vindhya.jpg|thumb|right|250px|[[இந்தியா]]வின் [[விந்திய மலைத்தொடர்]] அருகே உள்ள மழைக்கால முகில்கள்]]
|-
'''பருவப் பெயர்ச்சிக் காற்று''' என்பது, [[பருவகாலம்|பருவகால]] அடிப்படையில் திசைமாறி வீசுகின்ற [[காற்று முறைமை]]யைக் குறிக்கும். ஆரம்பத்தில் இது, அரபிக் கடல் மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளில் வீசும் காற்றுகளைக் குறிக்கவே பயன்பட்டது. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று, [[தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்று]] என்றும், [[வங்காள விரிகுடா]]ப் பகுதியிலிருந்து வீசும் காற்று, [[வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று]] என்றும் குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வருகின்றன. சில பகுதிகள் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களின்போதும் மழையைப் பெற, [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] பல பகுதிகள், [[இலங்கை]]யின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட வேறு சில பகுதிகள் ஒரு பருவத்தில் மட்டுமே மழையைப் பெறுகின்றன.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் '''வடகிழக்கு பருவமழைக் காலம்''' என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே -- குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 - 50 % மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது.