விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "விக்கிபீடியா"; Quick-adding category "விக்கிப்பீடியா கொள்கைகள்" (using HotCat) |
அநுபூதி |
||
வரிசை 1:
== அநுபூதி ==
அநுபூதி
நாவலில் இருந்து சில துளிகள்
நாவலின் பெயர் :- அநுபூதி
எழுத்து உருவாக்கம் :- அருகன்
பக்கங்களின் எண்ணிக்கை:-176
முதற்பதிப்பு:-2003.
இரண்டாம் பதிப்பு:-2007
வெளியிடுவோர்
தமிழ்ப் புதிய தலைமுறைச் சங்கம். (UNGA)
இத்தாலி.
பதிப்புரிமை© Arugan
ஈழத்து இளங்கலைஞர்களுக்கு இந்E}ல்
சமர்ப்பணம்
(...) “அநுபூதி” என்ற இதழானது மிக அருமையான ஒரு படைப்பு. கருத்து வளம் கொண்ட ஒரு தொகுப்புக் கட்டுரை E}ல். இதில் ஈழத்தமிழர்களின் உள்ளத்து உணர்வுகள், மனக்குமுறல்கள், எதிர் பார்ப்புக்கள் போன்றவை அழகாக கவிதை வடிவிலும், கட்டுரை வடிவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கருத்துக்களிலே கோர்வை நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. கருத்துக்களை உணர்த்துவதற்குப் பயன்படுத்திய உதாரணங்கள் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டுச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. (...)
(...) ஈழக் கலைஞர்களை வரவழைத்து அவர்களை கௌரவிக்கும் கருத்துச் சிறந்தது.
“சாகடிக்கப்படும் சரித்திரம்” என்ற தலைப்பின் கீழ் (அ)பூகோள நிலப்பரப்புக்களை ஒன்றிணைத்துப் பார்க்கும் பார்வை, (ஆ) புராணம் மற்றும் வரலாற்றுச் சான்றுகளாகிய இராமாயணம், விவிலியம் (அரக்கர் பற்றிய கருத்துக்கள்) பாராட்டக் கூடியன. (இ)இலங்கை “ஸ்ரீ லங்கா” என்று பெயர் மாற்றம் பெற்ற வரலாறு - சரியா என்பது ஐயமாக உள்ளது.ழூ அயடயசரஅய வாயஅடைநநடயவாவாசைமமர ழச எவைவார
”புலம் பெயர்ந்த பூக்கள்”-- இதில் கூறப்பட்டுள்ள தாய்நாட்டுப் பற்று, மொழிப்பற்று வரவேற்கத்தக்க கருத்து.
”தேசத்தின் புறத்திலும்” -- இதில் ஈழத்தமிழர்களின் கடந்தகால வரலாறு அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கருத்து ஆழம் மிக்க ஒரு கவிதை.
“செய் நன்றி கொண்ட மகற்கு உள்ளத்துப் போராட்டம், மனக் கஷ்டம், நெஞ்சத்துக் குமுறல்கள் நன்கு புலப்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
”ஆன்மீகப் பாதையும் ஆரோக்கிய வாழ்வும்” (அ) பல்வேறு கருத்துத் தொகுப்பைக் கொண்ட கட்டுரை, வாழ்க்கையின் அன்றாட நடைமுறை, யதார்த்த அமைப்புக்கள், நெறிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நல்ல ஆராய்ச்சி
ஆக மொத்தம்,- இது ஒரு சிறந்த கருத்தாழம் உள்ள ஒரு
அருமையான படைப்பு.
அருட்தந்தை.தோமஸ் லூயிஸ்
23.10.2002
(...) இன்று நாம் காணும் எங்கள் தாயகமாம் ஈழமண்டலம் மாங்காய் வடிவானதாக இருக்கும் முன்னர் தற்போது இருப்பதிலும் பார்க்க நிலப்பரப்பில் அதிகமாய் இருந்திருக்க வேண்டும் மட்டுமல்லாது, இந்திய பெருநிலப் பரப்புடன் இணைந்த வகையில் அல்லது மிக அண்மித்த நிலையில் காணப்பட்டிருக்கும் என்பதற்கு இனிவரும் சான்றுகள் உறுதியளிக்கும்.
அதைப் பார்க்கும் முன்னர், ஈழமண்டலம் மாங்காய் வடிவானது என்று சொன்னேன் அல்லவா? அது இலங்கையல்லவா? ஈழம் என்ற ஒரு நாட்டிற்காகத்தானே போராட்டம் நடக்கிறதுஎன்று ஒரு கேள்வி உங்கள் உள்ளத்தைத் துளைக்கவில்லையா?!
உண்மைதான் இன்றைய நிலை அப்படித்தான் உள்ளது. எவ்வளவு ஆணித்தரமான கேள்வி உள்ளத்தில் எழுகிறதோ அவ்வளவு ஆணித்தரமான எனது பதிலும் வெளிவரும். நான் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை என்பதனை உறுதிப்படுத்த.
இன்றைய ஈழப் போராட்டமானது புதிய ஒரு நாட்டை உருவாக்குவதற்கான போராட்டம் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்க, மாறாக ஈழமறுமலர்ச்சிக்காக என்பதனை அறியத்தவறி விட்டனர் பலவுள்ளங்கள். (...)
(...) விம்பமாக வெளிவருகின்ற வார்த்தைகளை எழுத்துருக் கொடுத்து நடமாட உங்களிடம் ஒப்படைப்பது என் பணி. அதில் நர்த்தனம் ஆடுவதும், எள்ளி நகையாடுவதும், உங்கள் தொனி.
புத்தபகவான் பேசிய பாழி மொழி அருகிவிட்டது. இயேசு பகவான் பேசிய கீபுறு, அராமைக், எபிரேய மொழிகள்மருகிவிட்டது, இப்படி அக்காலத்துமொழிகள்பலவும்அழிந்துவிட்டபோதிலும் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்தோன்றிய தமிழ் மொழி இன்றும் புதுப் பொலிவுடன் நிலையாய் நிற்கிறது என்றால்!
அது தேவ பாசையே,!! (...)
(...) ஒவ்வொரு மதங்கள் சொல்லும் வழிபாட்டிலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கத்தான்செய்கிறது.அதன்அர்த்தத்தைப் புரிந்து கொண்டோமேயானால் அவற்றை அதி சிரத்தையுடனும்,அவற்றின் பக்குவத்துடனும்,செய்ய நாமாகவே முனைந்து விடுவோம். (...)
(...) நீங்கள் இந்து வாக இருக்கலாம் !
கிறிஸ்தவராக இருக்கலாம்!
இஸ்லாமாகக்கூட இருக்கலாம் ! சமயங்களுக்கு அப்பாற்பட்டு உங்களை அழைக்கிறேன்.
உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, மற்றும் மொழி வேறு பாடு என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டு உங்களை அழைக்கிறேன்.
வயது முதிர்ந்தவர், இளைஞர் என்ற கட்டுப்பாடற்று அழைக்கிறேன்.
முக்கியமாக மனம் நொந்து வேதனைகளுக்கு எண்ணை ஊற்றிக்கொண்டிருப்பவர்,
உடல் நோய்களால் அல்லல் பட்டு ஆறுதல் தேடுவோர்,
தோல்விகளை அதிகம் சம்பாதித்து நிம்மதிகளைத் தொலைதூரத்தில் தொலைத்து விட்டவர்,
வாழ்க்கையின் குறிக்கோள் எது என்று வினாப்போட்டு விடைதேடுவோர்,
தாழ்வு மனப்பான்மையின் நிமித்தம் தாமாகவே ஒதுங்கி வாழ்பவர்,
மேலும் மனம் ஒருநிலையில்லாது சிறகடித்துப் பறந்து திரிகிறதே என்று எண்ணுகின்ற நெஞ்சங்கள் என்று ,
இப்படி யாராக இருந்தாலும் சரி என்னுடன் கொஞ்சம் உரையாட உங்களை அன்போடு அழைக்கிறேன்.
உலகத்தின் அனைத்துச் செயற்பாட்டிற்கும் அடித்தளம் “மனித செயற்பாட்டிற்கு” அப்பாற்பட்ட ஒரு சக்தியாக எண்ணத்தோன்றுகிறது அல்லவா.
ஆனால் மனிதனின் அனைத்துச் செயற்பாட்டிற்கும் அடித்தளமாக, மனிதனின் செயற்பாட்டிற்கு உட்பட்ட சக்தியாகவே அமைகிறது.
எனினும் இன்று வரை மனிதன் தன் செயற்பாட்டில் முழுச் செயற் திறன் உடையவனாக விளங்கவில்லை.
மாறாக ஆரம்ப காலத்தில் இருந்த மனித செயற்திறனை விட்டு விலகி நவீன பொருட்களை, இயந்திரங்களை நம்பி வாழ நேர்ந்து விட்டது.
மனிதன் “நான் யார்” என்று அறிந்து கொள்ள முடியாமலேயே உலகிலிருந்து விலகிவிடுகிறான்.
“இன்றைய உனது நிலை, நேற்றைய உனது சிந்தனைகளே !” (...)
|