ஹொங்கொங் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 20:
இவ்வாறு ஹொங்கொங் வந்தடைந்து நிரந்தர வதிவுரிமை பெற்றோர் ஒரு சிறிய தொகையினராகவே இருந்துள்ளனர்.
அதன்பின் அதிகமான தமிழர்கள் ஹொங்கொங் வந்தடைவதற்கு காரணியான இன்னுமொரு பின்னனி நிகழ்வும் உள்ளது. அதாவது தமிழகத் தமிழர்கள் பலர் [[மலேசியா|மலேசியாவில்]] உணவகத் தொழிலாளர்களாகவும், சமையல் தொழிலார்களாகவும் பணிப்புரிந்துள்ளனர். அவர்கள் பணிப்புரிந்த ஒரு உணவகம் '''பனானா லீப்''' நிறுவனமாகும். இது ஒரு மலேசியரினின் நிறுவனமாகும். மலேசியாவில் பல கிளைக்களைக் கொண்ட இந்நிறுவனத்தின் பார்வை ஹொங்கொங் பக்கமும் திரும்பியுள்ளது. இந்நிறுவனம் ஹொங்கொங்கில் பல கிளைகளை நிறுவியது. இவற்றில் மலேசிய உணவுகள் இருந்தாலும், இந்திய உணவுகளுக்கே பிரசித்திப்பெற்றது. எனவே மலேசியாவில் வீசா அற்று களவாக பணிப்புரிந்த பலருக்கு இது வாய்ப்பானது. அந்நிறுவனத்தின் உரிமையாளரின் அறிவுருத்தலின் படி பலர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்தியா சென்ற அவர்கள் புதியக் கடவுச்சீட்டுகளில் ஊடாக ஹொங்கொங் வந்தடைந்தனர். அவ்வாறு வந்தடைந்தவர்களின் உண்மையானப் பெயர்கள் மறைக்கப்பட்டு போலிப்பெயர்களின் ஹொங்கொங் இறங்கினர். எடுத்துக்காட்டாக: குப்புசாமி - சந்திரசேகர் ஆனார், குமாரசாமி - ரகுவரன் ஆனார். இவ்வாரு வந்தடைந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர்களாகும். இவர்களின் வருகையைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்களும் அவ்வாறே வந்தடைந்தனர். இவர்கள் வீசா அனுமதியுடன் 7 ஆண்டுகள் ஹொங்கொங்கில் வசித்ததால் இவர்களுக்கும் [[ஹொங்கொங் நிரந்தர வதிவுரிமை சட்டம்|ஹொங்கொங் நிரந்தர வதிவுரிமை]] கிடைக்கப்பெற்றது. இன்றும் ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமைப் பெற்று வசிக்கும் தமிழர்களில் அதிகமானோர் உணவகப் பணியாளர்களாகவே உள்ளனர்.
|