'''நிபிரு''' என்ற மிகப்பெரிய விண்பொருள் (கோள் என்றும் சொல்பவர் உண்டு) பூமியை நோக்கி நேராக வரப்போவதாகக் கூறும் (கற்பனைக்கதை எழுத்தாளர்) செக்காரியா செட்சினின் கருத்திலிருந்து துவங்கியதுதான்தொடங்கியதுதான் இந்த '''நிபிரு பீதி''' என்று கூறலாம். <ref> return of nibiru [http://www.2012returnofnibiru.com/] </ref> அவர் தன் கருத்திற்கு ஆதாரமாக வைப்பது, சுமேரியர்களின் புராதன ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறும் விடயங்களைத்தான். அவற்றில் நிபிரு என்ற கோள் உள்ளதாகவும் அது 3600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வரும் எனவும் கூறப்பட்டுள்ளது என்கிறார் இவர். '''அனுண்ணகி''' என்றழைக்கப்படும் வேற்றுக்கோள் வாசிகள் பூமிக்கு வந்தனர் என்றும் அவர்கள் கூற்றுப்படியே நிபிருவின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது; நிபிரு பீதியைக் கிளப்புபவர்கள் முன்னரே ஒரு தேதியைக் குறித்திருந்தனர் -- அதாவது மே 2003 -- அத்தேதியும் வந்து சென்று விட்டது; எனவே இப்போது தேதியை சற்று முன்னர் தள்ளிப்போட்டுள்ளனர் இவர்கள்!<ref> நாசா வலைத்தளம் ) 1.What is the origin...December 2012? ][</ref>
===மாயா இனமக்களின் நாட்காட்டி டிசம்பர் 21, 2012 அன்று முடிவுறுவது குறித்து?===
உண்மையில், மாயா நாட்காட்டி குறிப்பிடப்பட்ட தேதியான டிசம்பர்மார்கழி 21, 2012 அன்று முடிவடைவதில்லை; டிசம்பர்மார்கழி 31 அன்று நாம் பயன்படுத்தும் நாட்காட்டி முடிவடைந்தது என்று கூற முடியுமா! மீண்டும் ஒரு வருட நாட்காட்டியை நாம் தொடர்ந்து பயன்படுத்துவது இல்லையா? அதேபோல் தான் இந்த மாயா நாட்காட்டியும். இதன் தற்போதைய நீள்-எண்ணம் (long count) முடிவுற்றாலும் மறு தினமே மீண்டும் ஒரு புதிய தொடர்ந்த (நீள்-எண்ண) நாட்காட்டி துவங்கும். <ref> நாசா [http://www.nasa.gov/topics/earth/features/yoemans20091110.html]</ref>