பகாவுல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mzn:بهاءالله
சி தானியங்கிமாற்றல்: lt:Baha'u'llah; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Shrine of Bahá’u’lláh.jpg|thumb|280px|பஹாவுல்லாவின் நினைவாலயம்]]
'''பகாவுல்லா''' (''Bahá'u'lláh'', ''ba-haa-ol-laa'' [[அரபு மொழி]]: بهاء الله) "கடவுளின் புகழ்", [[நவம்பர் 12]], [[1817]] – [[மே 29]], [[1892]]), [[பஹாய் சமயம்|பஹாய் சமயத்தை]]த் தோற்றுவித்தவர் ஆவார். இவர் [[ஈரான்|பாரசீக]] நாட்டின் [[தெஹரான்]] நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் '''மிர்சா உசேய்ன் அலி'''. [[19ம் நூற்றாண்டு|பத்தொன்பதாம் நூற்றாண்டில்]], அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். [[1863]] ஆம் ஆண்டு இவர் [[பாப்]] என்பவரால் கூறப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே என அறிவித்தார். பஹாவுல்லா பல சமய நூல்களையும் எழுதினார்.
 
இவர் [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனத்தில்]] (தற்போது [[இஸ்ரேல்|இஸ்ரேலில்]] பாஹ்ஜி என்ற இடத்தில் மறைந்தார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
மிர்சா உசேய்ன் அலி [[1817]] ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை பாரசீகத்தின் ஷா மன்னரின் அரசவையில் ஓர் அமைச்சராகப் பணியாற்றியவர். பஹாவுல்லா குழந்தைப் பருவம் முதற்கொண்டே அறிவிலும் விவேகத்திலுமம் பெரிதும் வேறுபட்டவராகவும், நீதிக்கு பாடுபடுபவராகவும் புகழ்பெற்றிருந்தார். இவர் ‘பா’ப் அவர்களை ஒரு கடவுளின் அவதாரம் என ஏற்றுக்கொண்டு அச்சமயத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் பெரிதும் பாடுபட்டார். இவருடைய மனைவியின் பெயர் ஆசிய்யா ஃகானும். இத்தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுள் உயரிரோடிருந்த மூவரின் பெயர்கள் – அப்து’ல்-பஹா, பாஹிய்யா ஃகானும் மற்றும் மிர்சா மிஃடி என்பவையாகும். இந்த மூவரும் பின்னாளில் தங்களின் தந்தையின் நிழலில் பஹாய் சமயத்திற்காகப் பல அரிய சாதனைகள் புரிந்தனர்.
 
== கைது ==
‘பா’ப் அவர்களின் இறப்புக்கு அரசாங்கமே காரணம் என நம்பிய ‘பா’ப் அவர்களின் புத்தி பேதலித்த மூன்று சீடர்கள் மன்னரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டனர். ஆனால் இத்திட்டம் நிறைவேறாததோடு, அந்த மூவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். ‘பா’ப் அவர்களின் சீடர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகவும் பிரதானமாகவும் விளங்கிய பஹாவுல்லா அவர்களே இக்கூட்டத்தினருக்குத் தலைவர் என அரசாங்கம் தீர்மானித்து அவரைக் கைதும் செய்தது.
 
கைது செய்யப்பட்ட பஹாவுல்லா தெகரான் நகரின் பாதாளச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டார். உள்ளே போவதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே வழியைக் கொண்டது இச்சிறை. அது சன்னல்களோ காற்றுப் புக வேறு வழிகளோ இல்லாத ஒரு பயங்கரமான சிறையாகும். இதற்குள் அடைக்கப்படும் பலர் இதற்குள்ளேயே இறந்துபோவது வழக்காம். பயங்கர துர்நாற்றம் நிறைந்த இச்சிறையில் பஹாவுல்லா 20 மற்றும் 50 கிலோகிராம் எடையுடைய சங்கிலிகளால் பிணைக்ப்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார். “சியாச் சால்” என அழைக்கப்பட்ட இச்சிறையில்தான் தாம் கடவுளின் அவதாரம் எனும் அறிவிப்பு கனவில் ஒரு தேவகன்னியின் உருவில் அவருக்குக் கொடுக்கப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு ரஷ்ய தூதரின் தலையீட்டினால் பஹாவுல்லா குற்றமற்றவர் எனத் தீர்மானிக்கப்பட்டு, ஒரு நிபந்தனையோடு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அந்த நிபந்தனையானது, பஹாவுல்லா பாரசீக நாட்டை விட்டு நாடுகடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
 
== நாடு கடத்தப்படல் ==
பெரும் பனியிலும் கடும் குளிரிலும், கர்ப்பினியாகவிருந்த தமது மனைவியோடும் தமது பிள்ளைகளோடும் பிற மக்களோடும் காடு மலைகளைக் கடந்து [[இராக்]] நாட்டின் [[பாக்தாத்]] நகருக்கு பஹாவுல்லா நாடுகடத்தப்பட்டார். இராக் நாடு அப்போது [[ஒட்டமான் பேரரசு|ஒட்டமான் பேரரசின்]] ஒரு பகுதியாக இருந்தது. [[1953]] ஆம் ஆண்டு பாக்தாத் நகரை வந்தடைந்த பஹாவுல்லா, அந்த நகரில் [[1863]] வரை வசித்தார். இங்கும் பொறாமைக்காரர்களாலும், எதிரிகளாலும் பல இன்னல்களுக்கு ஆளாகி, பஹாவுல்லா இரண்டு வருடம் வனவாசம் சென்றார். வனவாசத்திற்குப் பிறகு திரும்பி வந்த பஹாவுல்லா அவர்கள் அங்கு வாழ்ந்த ‘பா’ப் அவர்களைப் பின்பற்றிய சமூகத்தினரை மேம்பாடு காணச் செய்வதில் ஈடுபட்டார்.
 
வரிசை 23:
சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் சிறையிலிருந்து வெளியேறி சிறிது சிறிதாக ஆங்காங்கு ஆக்கா நகரில் குடியேறினர். பஹாவுல்லா அவர்கள் சிறைக்குப் பக்கத்திலிருந்த ஒரு வீட்டிற்கு முதலில் குடிபெயர்ந்து இறுதியாக பாஹ்ஜி எனப்படும் இடத்தில் ஒரு மாளிகைக்குக் குடிபெயர்ந்து மீதமிருந்த தமது இறுதிக்காலத்தை அங்கேயே கழித்தார். இந்த மாளிகையும் அதனை ஒட்டியுள்ள பஹாவுல்லா அவர்களின் கல்லறையும் இன்று பஹாய்களின் புனிதத் ஸ்தலங்களாக விளங்குகின்றன.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bahaullah.org/ பஹாவுல்லாவின் வரலாறு]
* [http://www.bahai.org/article-1-3-0-2.html பஹாவுல்லா (bahai.org)]
வரிசை 29:
 
{{stub}}
 
 
[[பகுப்பு:சமயத் தலைவர்கள்]]
வரி 63 ⟶ 62:
[[ko:바하올라]]
[[lb:Bahá'u'lláh]]
[[lt:BahaulaBaha'u'llah]]
[[mwl:Bahá'u'lláh]]
[[mzn:بهاءالله]]
"https://ta.wikipedia.org/wiki/பகாவுல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது