அப்பூதியடிகள் நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
அப்பூதியடிகள் [[சோழர்|சோழ நாட்டில்]] [[திங்களூர்|திங்களூரில்]] வசித்தவர். மிகுந்த சிவ பக்தரான இவர், மேற்சொன்ன அறுபத்து மூவருள் முதன்மையான நால்வருள் ஒருவரான [[திருநாவுக்கரசு நாயனார்]] காலத்தில் [[7ம் நூற்றாண்டு|7ம் நூற்றாண்டில்]] வாழ்ந்தவர். [[திருநாவுக்கரசர்|திருநாவுக்கரசர்]] சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும், அவற்றையெல்லாம் இறை நம்பிக்கையைத் துணைக்கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு அவர்மீது அளவுகடந்த [[பக்தி]] கொண்டார். இதுவே அவரை ஒரு [[நாயன்மார்கள்|நாயனாராக]] மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது.
 
திங்களூருக்கு ஒரு முறை சென்றிருந்த [[திருநாவுக்கரசர்]] அப்பூதியடிகளின் இல்லம் சென்றார். அப்பூதியடிகள் பெருமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று [[உணவு|அமுது]]ண்டு செல்லுமாறு வேண்டினார். அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் [[பாம்பு]] தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு [[அப்பர்|அப்பரை]]த் உணவுண்ண வருமாறு அழைத்தார். திருநாவுக்கரசரும் மூத்த மகன் எங்கே என்று வினவினார். வேறு வழியின்றி உண்மையை உரைக்கிறார் அப்பூதியடிகள். அப்பூதியடிகளின் அன்பில் மனமுருகிய திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.
 
''"ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்"'' - [[சுந்தரமூர்த்தி நாயனார்]]''
"https://ta.wikipedia.org/wiki/அப்பூதியடிகள்_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது