மெய்கண்ட தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
* பூலோகசிங்கம், பொ., ''அ. சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம்'', கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு, 1975.
* இராசமாணிக்கனார். மா., ''சைவசமய வளர்ச்சி'', பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
சைவ சமைய ஆச்சாரிய பரம்பரை.......
ஞானமே வடிவான பரம்பொருளிடம் நேரடியாக உபதேசம் பெற்றவர்கள்......
அகச் சந்தான குரவர்கள் எனப் படுவர்........இவர்கள்
தேவ பரம்பரையைச் சேர்ந்தவர்கள் (அதாவது...எப்போதும் இறைவி, இறைவனோடே...திருக் கயிலாயத்தில் எழுந்தருளி இருப்பர்களாம்).
௧) திருநந்தி தேவர்
௨) சனகாதி முனிவர்கள் (சனத் குமாரர், சனகர், சனந்தனர், சனாதனர்)
௩) சத்தியஞான தரிசிநிகள்
௪) பரஞ்சோதி முனிவர்.
இவர்கள் நால்வரில்.....பரஞ்சோதியாரைத் தலையாகக் கொண்டு அடுத்த பூத பரம்பரை தொடங்குகிறது....இவர்களை புறச் சந்தானக் குரவர்கள் என்பர்.
௧) மெய்கண்ட தேவர்
௨) அருணந்தி சிவம்
௩) மறைஞான சம்மந்தர்
௪) உமாபதி சிவம்.
சைவ சமையம் தழைத்தோங்க......பெருந்தொண்டு செய்தவர்கள்........
இன்று...புறச் சந்தான குரவர்களில் முதலாமவரான மெய்கண்டாரைப் பற்றியும், பஞ்ச புராணம் ஓதுதல் பற்றியும், சைவ சமைய ஆச்சாரிய பரம்பரை பற்றியும்....சுருக்கமா பார்ப்போம்......
அச்சுத களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார், அவர்தம் குடும்பத்திற்கு வழி வழியாய் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்த சகலாகம பண்டிதர் என்னும் அடியவர் ஆசாரிய பெருமகனாக விளங்கினார். களப்பாளருக்கு ஊழ்வினைப் பயனால் மக்கட் செல்வம் இல்லை. அவரும், அவர்தம் துணைவியாரும் அவர்களது ஆசாரிய சுவாமிகளிடம் சென்று முறையிட்டனர். சகலாகம பண்டிதரும், அவர் தம் குறைகளைப் போக்க, திருமுறை பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார், அப்போது, சீர்காழிப் பிள்ளையார் (திருஞானசம்மந்தர்) அருளிய திருவெண்காட்டு பதிகம் வந்தது.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே
சகலாகம பண்டிதர், தனது சீடரையும், அவர்தம் துணைவியாரையும் திருவெண்காடு சென்று அங்குள்ள, முக்குளத்தில் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் அக்னி தீர்த்தம்) நீராடி, திருவெண்காட்டு பதிகம் தனை அனுசந்தானம் செய்து, திரு வெண்காடரை (ப்ருஹ்ம விதயாம்பாள் சமேத ஸ்வேதாரண்யேஸ்வரர்) , பணிந்து வருமாறு அருளினார். குருவின் திருவாக்குப் படியே களப்பாளரும் அவர் துணைவியாரும் திருவெண்காட்டிற்கு வந்து இறைவனை பூசிக்கலானார்கள்.
ஒரு நாள் இரவு, களப்பாளரின் கனவில் இறையனார் தோன்றி.....அன்பரே...இப்பிறவியில் உமக்கு குழந்தை பாக்கியம் இல்லை, இருப்பினும், எனது அன்பனான சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து வழிபட்டதால், திருஞான சம்பந்தனைப் போலவே உனக்கும் ஒரு தெய்வ மகவு தனை அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தார்.
கனவிலிருந்து விழித்துக்க் கொண்டவராய் எழுந்த களபாளருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அந்த கனவினை, தன மனைவியிடம் தெரிவித்தார். மங்கைபாகர் அருளிய வண்ணமே அந்த திவ்ய தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது.
திரு வெண்காடரின் திருவருளால் அவதரித்த மகவாதலால், ஸ்வேதவனப் பெருமாள் என்ற அவரது திருநாமத்தையே வைத்தனர். இறைவன் அருளிய குழந்தை அல்லவா......கேட்கவே வேண்டாம்.....நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஸ்வேதவனப் பெருமாள் வளரலானார். இளம் வயதிலேயே சிவ பக்தி மிகுந்தவராய்த் திகழ்ந்தார். ஒரு நாள், திருவெண்ணெய் நல்லூரில் (தம்பிரான் தொண்டரான சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஆட்கொண்ட திருத்தலம்) உள்ள தனது தாய்மாமாவின் இல்லத்திற்குச் சென்றிருந்தார் ஸ்வேதவனப் பெருமாள், அங்கே தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில், ஆகாய மார்க்கமாக பொதிகை மலை நோக்கி சென்று கொண்டிருந்த பரஞ்சோதி முனிவரின் கண்களில் தேஜோமயமான தெய்வக் குழந்தையான ஸ்வேதவனப் பெருமாள் தென்பட்டார். அவரைக் கண்டதும் கீழிறங்கி வந்து அவருக்கு மெய்ஞானம் தன்னை உபதேசித்தருளி அவருக்கு மெய்கண்டார் என்னும் திருநாமத்தையும் சூட்டி அருளினார்.
தனது குருவான பரஞ்சோதியார் உபதேசித்த சிவஞான சூத்திரங்களை தமிழில் அருளிச் செய்தார் மெய்கண்டார். அதற்கு அவரே வார்திகமும் அருளிச் செய்தார். அந்த நூல் சிவஞான போதம் என்று வழங்கலாயிற்று.(மெய்கண்ட சாத்திரங்களுள் முதலாவதாக விளங்கும் நூல்). அந்த நூலே பிற்காலத்தில் திரு அவதாரம் செய்தருளிய சந்தான ஆசாரியர்களின் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரமான நூலாக அமைந்தது. இவ்வாறாக மெய்கண்டாரின் பேரும் புகழும் நாடெங்கும் பரவியது. இதனை கேள்விப்பட்ட, அவரது குல ஆசாரியரான சகலாகம பண்டிதர், மெய்கண்டாரைக் காண திரு வெண்ணை நல்லூருக்கு எழுந்தருளினார். அச்சமயம், ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மெய்கண்டாரின் அருளுரை தனை கேட்க குழுமியிருந்தனர். மெய்கண்டாரும், அவர்களுக்கு நல்லாசி வழங்கிக் கொண்டு, ஆணவ மலந்தனைப் பற்றி அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
அருளுரை வழங்கிக் கொண்டிருந்த மெய்கண்டாரின் முன் சென்று...."இந்தச் சிறுவனுக்கு என்ன தெரியும்?" என்ற ஆணவத்தோடு....ஆணவம் ஆவது யாது? அதன் வடிவம் என்ன? என்று கேட்டார் சகலாகம பண்டிதர். பதிலேதும் பேசாமல், மெய்கண்டார் தனது விரல்களினால் சகலாகம பண்டிதரை ஆணவத்தின் வடிவமென சுட்டிக் காட்டினார்.
மெய்கண்டாரின் அருள் நோக்கால், தன்னிலை உணர்தவாராய், மெய்கண்டாரின் திருவடிகளில் தண்டனிட்டு எழுந்த சகலாகம பண்டிதர்......மெய்கண்டாரிடம், தன்னை அவர்தம் சீடராக ஏற்று அருளும்படி வேண்டினார். மெய்கண்டாரும், அவரை ஆட்கொண்டருளத் திருவுளம் கொண்டு.... சகலாகம பண்டிதருக்கு சிவ தீக்ஷை தந்தருளி, அவருக்கு அருணந்தி சிவம் என்ற திருநாமந் தனையும் வழங்கினார். சைவர்களால் சந்தானக் குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார் அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்டாரின் சிவஞான போதம் என்னும் நூலை அனுசரித்து சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றி அருளினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபது என்னும் நூலும் இவர் அருளியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞான சம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்.
குல குருவே மெய்கண்டாருக்குச் சீடராக மாறினார்...என்றால்.....
என்னே மெய்கண்டாரின் பெருமை..!!!!!!
புறச் சந்தான குறவர்களுக்கு...காலத்தே முந்தியவர்கள்...சைவ சமயக் குரவர்களான...
௧) சீர்காழிப் பிள்ளையார் (திருஞான சம்பந்தர்)
௨) அப்பர் ஸ்வாமிகள் (திருநாவுக்கரசர்)
௩) தம்பிரான் தோழர் (சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்)
௪) வாதவூரடிகள் (மாணிக்கவாசகர்)............
அமிழ்தினும் இனிய தமிழ் பாக்களினால் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள் (இவர்கள் அருளிய பாமாலை...தேவனுக்கு சூட்டிய ஆரம் ஆதலால்...தேவாரம் எனப்படுகிறது). சைவ சமைய மரபின் படி....12 திருமுறைகளையும் ஓதியே இறைவனை வழிபட வேண்டும், அவ்வாறு இயலாதவர்கள் முதல் ஏழு திருமுறைகளில் இருந்து ஏதேனும் ஒரு பாசுரம் (தேவாரம் பாடிய மூவரின் (திருஞான சம்பந்தர், அப்பர் ஸ்வாமிகள், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்) அருளிச் செய்த பாசுரங்கள்), எட்டாம் திருமுறையான திருவாசகத்தில் இருந்து (மாணிக்கவாசகர் அருளிச் செய்தது) ஒரு பாசுரம், ஒன்பதாம் திருமுறையில் இருந்து இரண்டு பாசுரம் ( திருவிசைப்பாவில் இருந்து ஒன்று, சேந்தனார் நாயனாரால், சிதம்பரம் தேர், தானே ஓடப் பாடி அருளிய திருபல்லாண்டு பாசுரத்தில் இருந்து ஒன்று), இறுதியாக பெரிய புராணத்திலிருந்து (சேக்கிழார் அருளியது) ஒரு பாசுரம் ஓத வேண்டும். இதனை பஞ்ச புராணம் ஓதுதல் என்று கூறுவர் சைவ சமைய சான்றோர்.
நால்வர் திருவடிகளே சரணம்.
மெய்கண்டார் திருவடிகளே சரணம்.
உமாபதி சிவாசாரியார் திருவடிகளே சரணம்.
வாழ்க சீர் அடியாரெல்லாம்
 
அடியேன் அ. முத்துச்சாமி,
 
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மெய்கண்ட_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது