மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Thalasayana_perumal|thumb|300px|அருகிலுள்ள குன்றில் இருந்து தலசயனப் பெருமாள் கோயிலின் தோற்றம்]]
[[மாமல்லபுரம்|மாமல்லபுரத்திலுள்ள]] '''தலசயனப் பெருமாள் கோயில்''' பழங்காலத்தைச் சேர்ந்த [[இந்துக் கோயில்|கோயிலாக]] இருந்த போதிலும் இன்னும் புழக்கத்திலுள்ள கோயிலாகவே இருந்து வருகின்றது. இக் கோயிலிலுள்ள இறைவர் ''உலகுய்ய நின்ற பெருமாள்'' எனவும் இறைவி ''நிலமங்கை நாச்சியார்'' எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள [[விஷ்ணு]] பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் [[திருமால்|திருமாலாகவே]] காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள் என வழங்கி வருகின்றது.
 
இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப் பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.
 
[[திருமங்கையாழ்வார்]] எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் ''கடல் மல்லைத் தலசயனம்'' என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள பல்லவர் காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர் கருத்து.
 
[[பகுப்பு:மாமல்லபுரம்]]