24 மனை தெலுங்குச்செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரை...
(வேறுபாடு ஏதுமில்லை)

18:45, 16 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் நிறைய தெலுங்கு பேசும் திராவிட இனமக்கள் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர்.

இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

அப்படி வந்தவர்கள்தான் 24 மனை தெலுங்குச்செட்டியார்கள் என்கிறார்கள். வீட்டில் தெலுங்கு பேசினாலும், இவர்களது ஆதார மொழி தமிழ்தான். தமிழ்ப்பண்பாட்டில் 24 மனைச்செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாததாகி விட்டது. குலதெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது.

24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. இதில் 8 கோத்திரம் பெண்வீடு என்றும் 16 கோத்திரம் ஆண்வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குள் திருமண உறவு என்பது 8 வீட்டார் 16 வீட்டாருடன் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். 8 வீட்டார் 8 வீட்டாருக்குள்ளோ, 16 வீட்டார் 16 வீட்டாருக்குள்ளோ திருமண பந்தம் வைத்துக்கொள்ளக்கூடாது. அது பங்காளிகளாக கொள்ளப்படுகிறது. இந்த சிறப்பான முறை இந்த சமூகம் தோன்றியதிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. இவர்களது திருமணத்தில் தாய்மாமனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமணசபையில் வைத்து, தாய்மாமனின் சம்மதம் பெற்ற பின்னரே மணமகனை மணமகளுக்குத் தாலி கட்ட வைக்கிறார்கள். பெரியதனத்தார், நாட்டாமை அல்லது தலைவர் ஆகியோர் முன்னிலையிலேயே திருமணம் நடக்கிறது. தமிழ்நாடு முழுக்க இவர்கள் பரவி இருக்கிறார்கள். என்றாலும் மதுரை, தேனி, திருச்சி, கோவை, திருநெல்வேலி, இராமநாதபுரம், சென்னை பகுதிகளில் அதிகளவு உள்ளனர். வியாபார நுணுக்கங்களை தமிழக மக்களுக்குக் கற்றுத் தந்தவர்களில் இச்சமூகத்தார் குறிப்பிடத்தக்கவர்கள்.