வரலாற்றுப் புதினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==தமிழில் வரலாற்றுப் புதினங்கள்==
தமிழின் முதலாவது வரலாற்றுப் புதினமான [[மோகனாங்கி (புதினம்)|மோகனாங்கியை]] எழுதியவர் [[இலங்கை]]யின் [[திருகோணமலை]]யைச் சேர்ந்த [[த. சரவணமுத்துப்பிள்ளை]] என்பவராவார். தமிழ்நாட்டில் மக்களைக் கவரும் வகையில் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் பால் ஆர்வத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] ஆவார். இதனால் இவர் தமிழ் வரலாற்றுப் புதினங்களின் தந்தை எனவும் அழைக்கப்படுவதுண்டு.
 
 
இவர் எழுதி "கல்கி" வார இதழில் தொடர் கதைகளாக வெளிவந்த [[பொன்னியின் செல்வன்]], [[சிவகாமியின் சபதம்]], [[பார்த்திபன் கனவு]] ஆகிய புதினங்கள் பெயர்பெற்றவை. இவரைத்தொடர்ந்து, [[அகிலன் (எழுத்தாளர்)|அகிலன்]], [[நா. பார்த்தசாரதி (எழுத்தாளர்)|நா. பார்த்தசாரதி]], [[செகசிற்பியன்]], [[கோவி. மணிசேகரன்]], [[சாண்டில்யன்]] போன்ற பல எழுத்தாளர்கள் தமிழில் வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யன், குமுதம் வார இதழ் மூலம் பல வரலாற்றுப் புதினங்களைத் தொடராக எழுதிப் புகழ் பெற்றார். [[கடல் புறா (புதினம்)|கடல் புறா]], [[யவனராணி (புதினம்)|யவனராணி]], [[ராஜமுத்திரை (புதினம்)|ராஜமுத்திரை]] போன்ற இவரது புதினங்கள் குறிப்பிடத்தக்கவை.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்றுப்_புதினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது