நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நற்செய்தி"
(வேறுபாடு ஏதுமில்லை)

04:24, 26 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

"நல்ல செய்தி"

நற்செய்தி என்னும் சொல் கிறித்தவ சமய மரபில் சிறப்பான இடம் பெறுகிறது. "நல்ல செய்தி" என்று பொருள்தருகின்ற இச்சொல் "சுவிசேஷம்" எனவும் வழங்கப்பட்டது. அதாவது, "சு+விசேஷம் = நல்ல+செய்தி". இதன் மூலச் சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது. "எவாங்கேலியோன்" என்னும் அச்சொல்லின் நேரடிப் பொருள் "நல்ல செய்தி" என்பதே (εὐαγγέλιον, euangelion (eu- "நல்ல", -angelion "செய்தி"). கிறித்தவ சமயம் கற்பிக்கின்ற மையச் செய்திதான் தொடக்கத்தில் "நற்செய்தி" என அழைக்கப்பட்டது. அதாவது, "இயேசு கிறித்து இவ்வுலக மக்களைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்டு, அவர்களுக்கு விடுதலை வழங்கி, கடவுளோடு நிலையான ஒன்றிப்பில் இணைந்து பேரின்பம் அனுபவிக்கும் பேற்றினைத் தம் சிலுவைச் சாவின் வழியாகவும் உயிர்த்தெழுதல் வழியாகவும் பெற்றுத் தந்தார்" என்பதே "நற்செய்தி"யின் உட்கரு ஆகும்.

புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நூல்களில் ஒன்றாகிய "கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்" என்னும் மடலில் (கி.பி. 54-55) புனித பவுல் "நற்செய்தி"யைக் கீழ்வருமாறு விளக்குகிறார்: "சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்...கிறித்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்..." (1 கொரிந்தியர் 15:1,3-4).

"நற்செய்தி" "நற்செய்தி நூல்" ஆன வரலாறு

இன்றைய கிறித்தவ வழக்கில் "நற்செய்தி" என்னும் சொல் இயேசு கிறித்துவின் வரலாற்றையும் போதனையையும் விளக்கி உரைக்கின்ற நான்கு புராதன ஏடுகளைக் குறிக்கும். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நால்வர் பெயரால் வழங்கப்படுகின்ற இந்த ஏடுகள் "நற்செய்தி நூல்கள்" (Gospels) என்று அழைக்கப்படுகின்றன. இவை கி.பி. 65-110 ஆண்டுக் காலத்தில் உருவாயின என்பது விவிலிய அறிஞர் கருத்து.

காண்க: நற்செய்தி நூல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்செய்தி&oldid=515771" இலிருந்து மீள்விக்கப்பட்டது