திவாலா நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
 
உண்மையில், திவாலா நிலைச் சட்டம் என்பதானது கடனாளிக்காக அல்லாமல்- பற்றாளருக்கான ஒரு நிவாரணமாகவே ஆரம்ப காலங்களில் திட்டமிடப்பட்டது. அரசர் ஹென்ரி VIII-இன் ஆட்சிக் காலத்தின்போது, தனக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வணிகர் ஒருவரின் அனைத்து [[சொத்து]]க்களையும் கைப்பற்றுவதற்கான உரிமையை பற்றாளருக்கு திவாலா நிலைச் சட்டம் அனுமதித்தது. மேலும், தன் சொத்து முழுவதையும் இழப்பதற்கும் கூடுதலாக, கடனாளி, தாம் கடனைத் திரும்பச் செலுத்தத் தவறியதற்காக, தன் சுதந்திரத்தையும் இழந்து சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதன் விளைவாக, கடனாளியின் குடும்பத்தார் அவரைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக அவர் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இருப்பினும், காலம் முன்னேற, கடனாளிகளின் உரிமைகளும் அதே போல முன்னேறத் துவங்கின.
உதாரணமாக, 1700களில் அடிக்கடி, கடனாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்;. அவர்களில் பலர் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குத் தப்பி ஓடிவிடிட்டனர். பலர் [[ஜார்ஜியா]] மற்றும் [[டெக்சாஸ்]] ஆகிய இடங்களுக்கு குடி மாறிச் சென்றனர்; இவை கடனாளிகளின் குடியிருப்பு என்று அறியப்படலாயின. இறுதியாக, இங்கிலாந்தில் 1800களின் துவக்கத்தில், கடனாளிகள் பலர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது கடன் தீர்க்கப்பட்டது. இருப்பினும், பல வருடங்களுக்கு திவாலா நிலை என்பதானது பற்றாளருக்கான நிவாரணமாகவே தொடர்ந்து, தன்னிச்சை அற்ற இயல்பு கொண்டும் மற்றும் தண்டனைக்குரியதாகவும் தொடர்ந்து இருந்து வரலானது. பொதுவாக, அது வணிகர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது.
 
ஆங்கிலேய முறைப்படி, (பற்றாளர் மற்றும் கடனாளி இருவரும்) இணைந்து அறிவிக்கும் திவாலா நிலை 1825வது ஆண்டு ஆங்கிலேயச் சட்டம் ஒன்றில் வரையறுக்கப்பட்டது. வணிகர் ஒருவர், திவாலாப் பிரிவின் தலைமைச் செயலதிகாரியின் அலுவலகத்தில் தாம் நொடித்து போனதாக ஒரு வாக்குமூலம் சமர்ப்பித்து அதை விளம்பரப் படுத்தும்போதும் இவ்வாறு நிகழலானது.
இவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்ட வாக்கு மூலத்தை அடுத்து ஒரு திவாலா விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதன் பிறகு, இந்தச் சட்டத்தின் அடிப்படையிலான திவாலா விசாரணக்குழு, "அத்தகைய வாக்குமூலம் திவாலா ஆனவர் மற்றும் பற்றாளர் அல்லது வேறொரு நபர் ஆகியோர் கலந்தாலோசித்தோ அல்லது பரஸ்பரம் ஒப்புக் கொண்ட முறைமையினாலோ செல்லுபடியாகாது என்று கருதக் கூடாது" என அறிவிப்பதானஅறிவித்து ஒரு சட்டம் இயற்றப்பட்டதுஇயற்றியது.
(6.ஜியோ.
IV, சி.16 பிரிவுகள் VI, VII (ஆங்கிலம்). 1849வது ஆண்டு வரை தன்னிச்சையான திவாலா நிலையானது அங்கீகரிக்கப்படவில்லை (12 மற்றும் 13, விக்ட்., சி.106, பிரிவு 93 (1849) (ஆங்கிலம்).
 
1789வது ஐக்கிய மாநிலங்கள் அரசியல் சட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டபோது திவாலா நிலை என்னும் கருத்தாக்கமானது குறிப்பான அங்கீகாரம் அளிக்கப்பட்டதுபெற்றது. ஐக்கிய மாநிலங்களின் அரசியல் சட்டம், ஐக்கிய மாநிலங்கள் முழுவதிலும் "திவாலா நிலை குறித்து ஒரே மாதிரியான சட்டங்கள்" இயற்றப்படுவதற்கான அதிகாரத்தைக் [[காங்கிரஸ்]] கொண்டிருக்கும் என்று கூறுகிறது. யூ.எஸ். கான்ஸ்ட்.I, பிரிவு 8, சிl.4. இவ்வாறாக, காங்கிரசால் இயற்றப்படும் திவாலா நிலைச் சட்டம் கூட்டரசின் சட்டம் என்பதாகிறது. முதல் திவாலா நிலைச் சட்டம் 1800வது ஆண்டு காங்கிரசால் இயற்றப்பட்டது. 1800வது வருடத்திய திவாலா நிலைச் சட்டம், அத்தியாயம் 6, 2 ஸ்டேட். 19 இது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்துவதாகவும் மற்றும் தன்னிச்சையற்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிப்பதாகவும் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் தன்னிச்சையான திவாலா நிலை என்பது அறியப்படாத ஒன்று.
 
ஐக்கிய மாநிலங்களில் தன்னிச்சையான திவாலா நிலை என்பதானது 1841வது வருடத்திய சட்டங்களால் (1841வது வருடம் ஆகஸ்ட் 19 சட்டம், பிரிவு 1, 5, ஸ்டேட்.440) மற்றும் 1867 (1867வது வருடத்திய மார்ச் 2 சட்டம், பிரிவு 11, 14, ஸ்டேட்.521) ஆகியவற்றால் ஒரு நிறுவனமாக நிலை நாட்டப்பட்டது.
நவீன கருத்தாக்கமான கடனாளி- பற்றாளர் உறவுகளை நிலை நிறுத்திய 1898வது வருடத்திய திவாலா சட்டம் என்னும் ஆரம்ப கால சட்டங்கள் தொடங்கி, சாண்ட்லர் சட்டம் என்று பரவலாக அறியப்படும் 1938வது வருடத்திய திவாலா சட்டம் வரையிலும், மற்றும் அதனைத் தொடர்ந்த பிற சட்டங்களிலும், தன்னிச்சையான திவாலாவின் நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டு, தன்னிசசையானதன்னிச்சையான மனுத் தாக்கல் செய்வது என்பதனைக் கடனாளிகளுக்கு மிகவும் விருப்பமான ஒரு தெரிவாகச் செய்துள்ளது.
 
திவாலா நிலைக் கோட்பாடுகள் என்று பொதுவாக அறியப்படும் 1978வது வருடத்திய திவாலா சீரமைப்புச் சட்டம் திவாலா அமைப்பில் ஒரு மிகப் பெரும் சீரமைப்பை உருவாக்கியது. எல்லாவற்றிற்கும் முதன்மையாக, 1979வது வருடம் அக்டோபர் முதல் தேதி துவங்கி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்திற்கும் இது பொருந்துவதானது. இரண்டாவதாக, 1978வது வருடத்திய சட்டத்தில் நான்கு தலைப்புகள் இருந்தன. தலைப்பு I என்பதானது யூ.எஸ்.கோட்பாட்டின் தலைப்பு 11 என்பதன் திருத்தமாகும்;. தலைப்பு II என்பதானது யு.எஸ்.கோட்பாட்டின் திருத்தப்பட்ட தலைப்பு 28 மற்றும் சாட்சி பற்றிய கூட்டரசு சட்டங்களைக் கொண்டிருந்தது; . தலைப்பு III, திவாலா நிலைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட இதர கூட்டரசுச் சட்டங்களில் தேவையான மாற்றங்களைச் செய்வதாக இருந்தது;, மற்றும், தலைப்பு IV, திவாலா நிலைக் கோட்பாடுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டிருந்த சட்டங்களை ரத்து செய்வது, புதிய சட்டத்தின் பிரிவுகளுக்கான அமலாக்கத் தேதிகள், சேமிப்பிற்குத் தேவையான வசதிகள், இடைக்காலத்தில் குடும்பச் செலவுகளுக்கான விபரங்கள் மற்றும் ஐக்கிய மாநில அறங்காவலரின் முன்னோட்ட நிரல் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
 
1978வது வருடத்திய சட்டத்தின் கீழ் நிகழ்ந்த மாற்றங்களில் மிகவும் முக்கியமானது எனபதுஎன்பது நீதி மன்றங்களைப் பொருத்ததாகவே இருக்கலாம். 1978வது வருடத்திய சட்டம் நீதி மன்றங்களின் கட்டமைப்பைத் தலைகீழாக மாற்றியமைத்து, நீதி மன்றங்களின் நீதி அதிகாரிகளுக்கு எங்கும் செல்லுமை கொண்டதான அதிகார வரம்பு எல்லைகளை அளித்தது. இந்தச் சட்டம், "தலைப்பு 11 என்பதன் கீழ் உள்ள அனைத்துக் குடிமக்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் தலைப்பு 11 என்பதன் கீழ் அல்லது அதற்குத் தொடர்பான வழக்குகள்" அனைத்தின் மீதாகவும் புதிய நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பு எல்லைகளை அளித்தது. 28 யு.எஸ்.சி §1471 (பி)(1976 பதிப்பு. சப்.)
 
மாவட்ட நீதிமன்றம் என்பதன் இணையாக இந்தப் புதிய நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டு, அவை தன்னுரிமை கொண்ட நீதி மன்றங்களாகச் செயல்பட வழி வகுக்கப்பட்டது. இவ்வாறு விரிக்கப்பட்ட அதிகார வரம்பு எல்லை என்பதானது முதன்மையாக திவாலா நீதிபதிகளாலேயே கையாளப்படுவதானது. திவாலா நீதிபதியானவர் ஷரத்து I என்பதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்படும் நீதிபதியாவார்.
 
1978வருடத்திய சட்டத்தின் விதிகள் நார்த்தர்ன் பைப்லைன் கம்பெனி அதற்கெதிரான மராத்தன் பைப்லைன் கம்பெனி, 458 யு.எஸ். 50 102 எஸ். சிடி என்ற வழக்கில் நுண்ணாய்வுக்கு உட்சென்றன. 2858, 73 எல். 2டி 598 [6 சி.பி.சி.2டி 785] (1982). பொதுவாக, மராத்தன் வழக்கு என்று குறிப்பிடப்படும் இந்த உச்ச நீதிமன்ற வழக்கில், நீதி மன்றம், திவாலா நீதிபதிகளுக்கு விரிவான அதிகார வரம்பு எல்லை வழங்கப்படுவதை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று நிலை நிறுத்தியது;. ஏனெனில், இந்த நீதிபதிகள் அரசியல் சட்டமைப்பின் ஷரத்து III என்பதன் கீழ் நியமனம் செய்யப்படுவதோ அல்லது பாதுகாக்கப்படுவதோ இல்லை. ஐக்கிய மாநிலங்களின் அரசியல் சட்டமைப்பின் ஷரத்து III என்பதன்படி, நீதிபதிகள் தங்களது நன்னடைத்தைக் காலத்தில் (வாழ்வு முழுவதற்குமான ஒரு நியமனமாக) பதவியில் வீற்றிருப்பார்கள் மற்றும் அவர்களது பதவிக்காலத்தின்போது அவர்களது ஊதியம் வெட்டப்பட முடியாதது. ஷரத்து I என்பதன் கீழாக வரும் நீதிபதிகளுக்கு அத்தகைய பாதுகாப்புக் கிடையாது.
 
கடனாளர் எதிர் நடவடிக்கை கோரி திவாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, அதிகார வரம்பு எல்லை தொடர்பான கேள்விகள் உருவாகத் தொடங்கின;. இவற்றால், ஒப்பந்த மீறல், உத்திரவாதச் சான்று மற்றும் தவறான முறையில் வெளிப்படுத்துதல் ஆகிய விஷயங்களும் பார்வைக்கு உள்ளாயின. மாவட்ட நீதிமன்றத்தில் பிரதிவாதி தாக்கல் செய்திருந்த தள்ளுபடி கோரும் மனுவை திவாலா நீதி மன்றம் மறுத்து விட்டது. 28 யு.எஸ்.சி.§1471 என்பதானது, திவாலா நீதிமன்றங்களுக்கு விரிக்கப்பட்ட அதிகார வரம்பு எல்லைகளை வழங்கியதன் மூலமாக, ஷரத்து III என்பதன் கீழ் வரும் நீதிபதிகளுக்கு உரிய அதிகாரங்களை இது ஷரத்து III அல்லாத நீதிபதிகளுக்கு அளித்தது ஐக்கிய மாநிலங்கள் அரசியல் சட்ட அமைப்பின் ஷரத்து III என்பதன் மீறலாக உள்ளது என்று மாவட்ட நீதி மன்றம் தீர்ப்பளித்தது. பன்மைக் கருத்துக்கள் பெறப்பட்ட ஒரு தீர்ப்பில், உச்ச நீதி மன்றமானது 28 யு.எஸ்.சி '1471 என்னும் சட்டத்தால், திவாலா நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்ட விரிக்கப்பட்ட அதிகார வரம்பு எல்லை என்பதானது ஷரத்து III என்பதன் கீழ் வரும் அதிகாரங்களை ஷரத்து III என்பதன் கீழ் வராத நீதி மன்றங்களுக்கு அளித்த செயற்பாடு ஒரு சட்ட முரணான அதிகார வழங்கீடு என்று கூறியது. இதைப் போன்றே, அதிகார வரம்பு எல்லை ஷரத்துக்களை முன் வைத்த 28 யு.எஸ்.சி '1471 என்னும் 1978வது வருடத்திய திவாலா சீரமைப்பு சட்டத்தின் 241 (ஏ) என்னும் பிரிவும் சட்ட முரணானது. "திவாலா சட்டங்களின் இடைக்கால நிர்வாகத்தைப் பாதிக்காத வண்ணம், திவாலா நீதிமன்றங்களைத் திருத்தியமைக்க அல்லது வேறு வகையான செல்லுமை கொண்ட சட்டங்களை இயற்ற காங்கிரசிற்கு ஒரு வாய்ப்பு" அளிப்பதற்காக, நீதி மன்றமானது தனது தீர்ப்பை 1982வது வருடம் அக்டோபர் 4 வரை ஒத்தி வைத்தது. ஐடி 458 யு.எஸ்.89இல்.
 
இந்தத் தடையுத்தரவுதடை உத்தரவு காலாவதியான பிறகும், காங்கிரஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கத் தவறி விட்டது. உருமாதிரியான ஒரு "அவசர நிலை விதி" என்பது மாவட்ட நீதிமன்றங்களால், பகுதி சார்ந்த விதியாக கடைப்பிடிக்கப்படலானது. இந்த விதியின் நோக்கமானது திவாலா நிலை அமைப்பு சிதைந்து விடாமல் காப்பதும் மற்றும் மராத்தன் வழக்கு தீர்ப்பிற்குப் பிறகு, திவாலா வழக்குகள் முறையாக நிர்வகிக்கப்படுவதற்கு ஒரு தாற்காலிகமான செயல்பாடாகவும் விளங்குவதாக இருந்தது.
1984வது வருடம் ஜூலை 10 அன்று 1984வது வருடத்திய சட்டம் இயற்றப்படும் வரை இந்த விதி அமலில் இருந்தது. இத்தகைய "அவசர நிலை விதி" என்பதன் சட்டபூர்வமான செல்லுமை எப்போதும் தாக்குதல்களுக்கு உட்பட்டிருந்தாலும், உச்சநீதி மன்றம், ஆவணங்களை முன்னிலைப்படுத்தும் உத்திரவை கீழ் நீதிமன்றங்களுக்கு இடுவதற்கு மறுத்தே வந்துள்ளது.
 
வரிசை 43:
(அ) தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் வழக்குகள் மற்றும் தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் ஏதாவது அல்லது அனைத்து நடவடிக்கைகளும் அல்லது தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் ஒரு வழக்கு தொடர்பானவையும், அந்த மாவட்டத்திற்கு உரிய திவாலா நீதிபதிகளுக்கு குறித்தொதுக்கப்பட வேண்டும்.
 
(ஆ) (1) தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் அனைத்து வழக்குகள் மற்றும் தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் மைய நடவடிக்கைகள் அல்லது, இந்தப் பிரிவின் துணைப் பிரிவு (அ) என்பதன் கீழ், தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் ஒரு வழக்கு தொடர்பாக உருவாகுபவை ஆகிய அனைத்தையும் திவாலா நீதிபதிகள் கேட்டு அவற்றைத் தீர்மானித்து, உகந்த ஆணைகள், தீர்ப்புகள் ஆகியவற்றை, இந்தத் தலைப்பின் கீழ் வரும் பிரிவு 158 என்பதன் கீழ் மறு ஆய்வுக்கு உட்பட்டு, அளிக்கலாம். [அழுத்தம் கூட்டப்பட்டுள்ளது]
 
28 யு.எஸ்.சி. §157 என்பதனால் விவரிக்கப்பட்டுள்ள மைய நடவடிக்கைகள் என்பவை இவற்றை உள்ளடக்கியுள்ளன, ஆனால் அவை இவை மட்டுமேயாகாது:
 
(அ) பண்ணை அல்லது சொத்து ஆகியவற்றின் நிர்வாகம் தொடர்பான விஷயங்கள்
(ஆ) பண்ணை அல்லது பண்ணைச் சொத்து ஆகியவற்றிற்குத் தொடர்பான சலுகைகள் அல்லது அவற்றிற்கு எதிரானவை அல்லது பண்ணைச் சொத்துக்கு விலக்குகள் மற்றும் கோரிக்கைகளின் கணக்கீடு அல்லது தலைப்பு 11 என்பதன் கீழான அத்தியாயங்கள் 11, 12, அல்லது 13 ஆகியவற்றின்படி வட்டியைக் கணக்கிடல்;. ஆனால், இதில், பண்ணைச் சொத்துக்கு எதிராக நிறுவனக் கலைப்புக் கணக்கீடு அல்லது வரக்கூடிய அல்லது கலைவுறாத தனிப்பட்ட காய பொல்லாப்பு அல்லது தவறாக விளைக்கப்பட்ட மரணம் ஆகியவற்றின் காரணமாக, தலைப்பு 11 என்பதன் கீழ் விநியோக நோக்கங்கள் குறித்த
கோரிக்கைகள் இடம்பெறா;
(இ) பண்ணைச் சொத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு எதிராக பண்ணைச் சொத்தின் பதில் மனுக்கள்;
வரிசை 76:
 
===மேற்கத்திய பகுதிகள்
 
===
பண்டைக்கால கிரேக்க நாட்டில் திவாலா என்னும் நிலை இருக்கவில்லை. ஒரு மனிதன் (உள்ளூர்ப் பகுதியில் பிறந்த ஆண்களே குடிமகன்களாகக் கருதப்பட்டனர் மற்றும் சொத்துக்களின் சட்ட பூர்வமான உரிமைகள் அனைத்தையும் ஆண்களே கொண்டிருந்தனர்) கடன் பெற்ற பின்பு அதைத் திரும்பக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தால், அவனும் அவன் குடும்பமும், அதாவது அவன் மனைவி, மக்கள், பணியாட்கள் உட்பட அனைவரும், தங்களது உடலுழைப்பு மூலம் கடனைத் தீர்க்கும் வரையிலும் கொத்தடிமை முறைமைக்கு ஆளாக்கப்பட்டனர். பண்டைய கிரேக்க நாட்டின் பல மாநிலங்கள் இவ்வாறான கொத்தடிமை முறைமைக்கு அதிக பட்ச கால கட்டமாக ஐந்து ஆண்டுகளை நிர்ணயித்திருந்தன மற்றும் கொத்தடிமைகள் தங்களது உயிர் மற்றும் உடற்பாகங்களுக்கான உத்திரவாதம் பெற்றிருந்தனர். இது, வழக்கமான அடிமைகளுக்குக் கிடைக்கப் பெறாத ஒன்றாக இருந்தது. இருப்பினும், பற்றாளர், இந்தக் காலக் கெடுவிற்குப் பின்னாலும், கடனாளியின் வேலையாட்களை நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும்; பெரும்பான்மையான நிகழ்வுகளில், இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், கடினமான சூழ்நிலைகளில் தங்களது புதிய ஆண்டைக்கு ஊழியம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/திவாலா_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது