திவாலா நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 116:
=== ஆஸ்திரேலியா===
[[ஆஸ்திரேலியா]]
அதிகாரபூர்வமான பெறுநர் எனப்படும் நொடித்துப் போனவற்றிற்கான அறங்காவலர் சேவை ஆஸ்திரேலியா (இன்சால்வென்சி அண்ட் ட்ரஸ்டி சர்வீஸ் ஆஸ்திரேலியா -ஐடிஎஸ்ஏ) என்னும் மையத்தில் கடனாளிக்கான மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம், ஒரு நபர் அல்லது கடனாளி தன்னை திவாலா ஆனவர் என்று அறிவித்துக் கொள்ளலாம். கூட்டரசு நீதிபதியின் நீதிமன்றத்தில் கையகப்படுத்தும் ஆணை பிறப்பிப்பதற்குக் கொண்டு செல்லக் கூடிய பற்றாளர் மனுத்தாக்குதலின் மூலமும் ஒரு நபரைத் திவாலா ஆனவர் என்று அறிவிக்க இயலும். திவாலா நிலை அறிவிப்பதற்கோ அல்லது பற்றாளர் மனு தாக்கல்
அனைத்துத் திவாலா நபர்களும் ஐடிஎஸ்ஏவில், தங்களது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்தான முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ள, நிலைசார் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த
சாதாரணமாக, பகுதி IV என்பதன் கீழான திவாலா நிலையானது நிலை சார் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மூன்று வருடங்கள் வரையிலும் நிலுவையில் இருக்கும். கடனாளி மனுத் தாக்கல் செய்திருப்பின், நிலை சார் அறிக்கையானது, மனுவுடன் இணைந்து தாக்கல் செய்யப்பட்டு மூன்று வருட கால கட்டம் அதனுடன் உடனடியாகத் துவங்குவதாக அமையும். இருப்பினும், பற்றாளர் மனுத் தாக்கல் செய்திருப்பின், நிலை சார் அறிக்கையானது, நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட அதே நாளில் தாக்கல்
திவாலா ஆகிவிட்ட சொத்து தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு ஒரு ஒரு திவாலா நிலை அறங்காவலர் (பெரும்பான்மையான வழக்குகளில் அதிகாரபூர்வமான பெறுநர்) நியமிக்கப்படுவார். இந்த அறங்காவலரின் பணியில், சொத்தின் பற்றாளர்களுக்கு அறிவிப்பு அளிப்பது, பற்றாளர்களின் கேள்விகளுக்குப் பதிலிறுப்பது, திவாலாவாகிப் போன நபர் ''திவாலா நிலை சட்ட'' த்தின் கீழ் தனது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுகிறாரா என்று கண்காணிப்பது, திவாலா நபரின்
தமது திவாலா நிலை கால அளவைப் பொறுத்த வரை, திவாலா நபர்கள் அனைவருக்கும் சட்டத்தின் கீழ் சில கட்டுப்பாடுகள் உள்ளன. உதாரணமாக, ஒரு திவாலா நபர் கடல் கடந்து பிரயாணம் மேற்கொள்வதற்கு, தமது அறங்காவலரின் அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால், அந்த திவாலா நபர் ஆஸ்திரேலிய கூட்டரசுக் காவல் துறையினரால் விமான நிலையத்தில் மறிக்கப்படலாம். மேலும், ஒரு திவாலா நபர் தனது வருமானம் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றைப் பற்றிய விபரங்களை அறங்காவலரிடம் அளிப்பது தேவைப்படும். தனது வருமானம் பற்றிய தகவல்களைத் தருமாறு அறங்காவலரின் வேண்டுகோளைப் பூர்த்தி செய்ய திவாலா நபர் தவறி விட்டார் எனில், அவருக்கு கடன்களிலிருந்து விடுதலை வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்து அறங்காவலர் மனுத் தாக்கல் செய்யலாம்; இது திவாலா நிலைக் காலம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதில் விளையலாம்.
நிதியை அடைவது என்பது வழக்கமாக இரண்டு வழிகளிலிருந்தே பெறப்படுவாதாகும்: திவாலா நபரின் சொத்துக்கள் மற்றும் திவாலா நபரின் வருமானங்கள். சில வகையான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, "பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள்" என்றழைக்கப்படுகின்றன. இவற்றில், வீட்டுப் பொருட்கள் மற்றும் கருவிகள், வியாபாரக் கருவிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட மதிப்பு வரையிலான வாகனங்கள் ஆகியவை அடங்கும். மதிப்புடைய பிற சொத்துக்கள் அனைத்தும் விற்கப்படும். வீடு அல்லது வாகனமானது ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு மேற்பட்டிருந்தால், திவாலா நபர் அந்தச் சொத்தைத் தம்மிடமே வைத்துக் கொள்ள சொத்தின் மீதான வட்டியைக் கட்டத் தெரிவு செய்யலாம். திவாலா நபர் அவ்வாறு செய்யாவிட்டால்,
ஒரு திவாலா நபரின் வருமானம் குறிப்பிட்ட அளவிற்கு மேற்பட்டு இருந்தால், அவர் தமது வருமானத்திலிருந்து ஒரு பகுதியை வருமான வழங்கீடு என்பதாக வழங்க வேண்டும். இந்த மதிப்பு நிலை என்பதானது வருடத்திற்கு இரண்டு முறையாக, மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில், அகவரிசைப்படுத்தப்பட்டு, திவாலா நபரை அண்டியுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, மாறுபடுவதாக அமையும். வருமான வழங்கீடு தொடர்பான கடப்பாடு, அது மதிப்பு நிலையை மேற்பட்டு இருக்கும் அளவைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது. ஒரு திவாலா நபர் தனது வழங்கீடுகளை அளிக்கத் தவறி விட்டால், அறங்காவலர் திவாலா நபரின் வருமானங்களைக் கையகப்படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பினை விடுக்கலாம். அது சாத்தியம் அல்லவெனில், கடன்களிலிருந்து விடுதலை அளிப்பதற்கான ஆட்சேபத்தை அறங்காவலர் தாக்கல் செய்து, திவாலா நிலை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்கப்பட வழி வகுக்கலாம்.
வரிசை 135:
அனைத்துக் கடன்களும் முழுவதுமாகத் தீர்க்கப்பட்டு விட்டால், திவாலா நிலையானது, அதன் காலக் கெடுவான மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே முடித்து வைக்கப்படலாம். சில நேரங்களில், ஒரு திவாலா நபர் தன் பற்றாளர்களுக்கு சமரசம் வேண்டும் ஒரு அழைப்பு விடுக்கும் அளவு நிதி திரட்ட முடிந்தால், பற்றாளர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்கும் நிலையை அடையலாம். இந்த அழைப்பைப் பற்றாளர்கள் ஏற்றுக் கொண்டால், நிதி பெறப்பட்ட பிறகு, திவாலா நிலை இரத்து செய்யப்படும்.
திவாலா நிலை இரத்து செய்யப்பட்ட பிறகு அல்லது திவாலா நபர் தானாகவே விடுதலை பெற்ற பிறகு, திவாலா நபரின் கடன் அறிக்கை நிலை "விடுதலை பெற்ற திவாலா நபர்" என்று சில வருட காலத்திற்கு அறிவிக்கப்படுவதாக அமைந்திருக்கும். இந்த அறிக்கை எத்தனை வருடங்களுக்கானது என்பது அதனை வெளியிடும் நிறுவனத்தைப் பொறுத்தது
ஆஸ்திரேலியாவில் திவாலா நிலை சட்டம் பற்றிய வரம்புக்கு உட்படுத்தப்பட்ட சில தகவல்களை ஐடிஎஸ்ஏ வலைத் தளத்தில் பெறலாம்.<ref>[http://www.itsa.gov.au/ ஐடிஎஸ்ஏ]</ref>
===பிரேசில்===
|