'''பால கங்காதர திலகர்''' ({{lang-mr|बाळ गंगाधर टिळक}} {{lang-hi|लोकमान्य बाल गंगाधर तिलक
}}) {{birth date|1856|07|23|df=yes}}–{{death date and age|1920|08|01|1856|07|23|df=yes}}, ஒரு இந்தியத் [[தேசியவாதி]]யும், [[சமூக சீர்திருத்தவாதி]]யும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தின்]] முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். ''தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன்'' என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது.
==இளமைக்காலம்==
திலக், இந்தியாவின் [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]][[ரத்தினகிரி]]யில்ரத்தினகிரியில் உள்ள "மதாலி அலீயில்" பிறந்தார். [[நடுத்தர வகுப்பு|நடுத்தர வகுப்பைச்]] சேர்ந்த மராத்தி சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவர், 1877 ஆம் ஆண்டில் [[பூனா]]வில் உள்ள [[டெக்கன் கல்லூரி]]யில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றார். முதலில் பூனாவில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் [[கணிதம்|கணித]] ஆசிரியராகப் பணியில் சேர்ந்த திலக் பின்னர் ஒரு [[பத்திரிகையாளர்]] ஆனார். இவர் மேனாட்டுக் கல்வி முறையைக் கடுமையாகச் சாடி வந்தார். அம் முறை இந்தியப் பண்பாட்டை அவமதித்ததாக அவர் கருதினார். இவர் இந்திய இளைஞர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காகத் [[தக்காணக் கல்விச் சபை]]யை நிறுவினார். இவர் பெர்கூசன் கல்லூரியில் கணிதமும் கற்பித்து வந்தார்.