விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ர, ற, ட - ta, ra, da சிக்கல் தொடர்பாக மயூரநாதனின் விரிவான கருத்துக்கள் |
|||
வரிசை 215:
இந்த முக்கியமான கலந்துரையாடலில், எனக்குச் சரியென்று பட்டதையும், பல நூல்களையும் வாசித்ததன்மூலம் அறிந்துகொண்டவற்றையும் எடுத்துக்கூறுவதுதான் எனது நோக்கமே அன்றி எவரையும் எதிர்த்து வாதம் புரிவதல்ல. நான் முன்வைத்த கருத்துக்கள் பிழையானவை என்று யாராவது ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினால் என்னுடைய கருத்துக்களை நான் மாற்றிக்கொள்ளுவேன். [[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 19:49, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
==செல்வாவின் மறுமொழி==
*மயூரநாதன், நான் கருப்பு-கறுப்பு பற்றி நீங்கள் கூறுவ்து போல எங்கும் சொல்லவில்லை. ரகர ஒலிப்பை எப்படி பிற சொற்களில் பயிலுவீர்கள் என்று கேட்பதற்கு பிற சொற்களை எடுத்துக் காட்டினேன்.
*மகன் என்பதை magan என்றுதான் சொல்லுதல் வேண்டும். வல்லொற்று வராவிடில் மெலிந்தே ஒலிக்க வேண்டும். ங், ன் ஆகிய மெல்லின எழுத்துக்கள் இருந்தால் சற்று மூக்கொலி மிகலாம் ஆனால் அதெல்லாம் நுட்ப் வேறுபாடுகள் - இப்படிப்பட்ட நுண் ஒலி வேறுபாடுகள் மிகப்பலவாம். வல்லின எழுத்துக்கு குற்றியலுகரம், முதலிய தவிர்த்த ஒலிகளில் இரண்டே இரண்டு ஒலிப்புகள்தான் உள்ளன. எ-கா. k-g, p-b, t-d. மூன்று ஒலிகள் ககரத்திற்கு உள்ளதென்று எங்கே கூறப்பட்டுளது? அறிவித்தால் நலம். எடுத்துக்காட்டாக பங்கு, நான்கு, பகு, நகு ஆகிய எல்லா சொற்களிலும், ககரம் மெலிந்தே ஒலிக்கும். pahu, nahu என்று கூறுவது திருந்தா கொச்சை ஒலிப்பு. சிறிதளவு காற்றொலி வருதலும், அதே போல மெல்லின எழுத்துக்குப் பின் சிறிதளவு மூக்கொலி வருதலும் இயல்பு, ஆனால் அவற்றை மிகைப்படுத்தலாகாது. எந்த ஒரு எழுத்தும், இடத்திற்கு ஏற்றவாறு மிகப்பலவாறு திரிபுறும் (வெறும் இரண்டு மூன்று வகை மட்டுமில்லை). அவை எல்லாம் நுட்பத்திரிபுகள்.
*Tornonto என்பது டொரான்ட்டோ என்று எழுதினால், முதல் எழுத்து வல்லின எழுத்தாகையால் வலைத்து To என்று ஒலித்தல் வேஎண்டும். தமிழில் டகரமும், ரகரமும், றகரமும் ஒரு சொல்லின் முதல் ஒலியாக வரலாகாது. ஆனால், இங்கே உள்ளது வேற்றுமொழி. மேலும் ரகரம் நுனிநா வருடுவதால் எழுவது, எனவே To என்பதற்கு பயன்படுத்துவது தவறு. இதனை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் தவறு என்பது, தொல்காப்பிய அடிப்படையிலும், பெருவாரியான தமிழர்கள் புரிந்துகொண்டதின் அடிப்படையிலுமே சொல்லுகிறேன்.
*செ.வை.சண்முகம் அவர்கள் கருத்தை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது அது சரியானதாக எனக்கு படவில்லை. அவர் கூறவந்ததை, இந்த சிறிய மேற்கோள்வழி நான் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.--[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 20:48, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா
|