மாதோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மாதோட்டம்''' என்பது, இலங்கைத் தீவில், பல [[நூற்றாண்டு]]களுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் [[பட்டினம்]] ஆகும். இது [[இலங்கை]]த் தீவின் வடமேற்குக் கரையில், இன்றைய [[வட மாகாணம், இலங்கை|வடமாகாணத்தின்]] [[மன்னார்]] மாவட்டத்தில் அமைந்திருந்தது. [[பாளி]] மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை ''மாதொட்ட'' அல்லது ''மகாதித்த'' என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் ''மாந்தை'' என்றும் ''மாதோட்டம்'' என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய [[துறைமுகம்|துறைமுகமாக]] இது விளங்கியது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த [[நாணயம்|நாணயங்களும்]], [[போசலின்]] பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் [[அகழ்வாய்வு]]கள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
 
==அமைவிடம்==
 
இது [[இலங்கை]]த் தீவின் வடமேற்குக் கரையில், இன்றைய [[வட மாகாணம், இலங்கை|வடமாகாணத்தின்]] [[மன்னார்]] மாவட்டத்தில் அமைந்திருந்தது. [[மல்வத்து ஓயா]] என அழைக்கப்படும் ஆற்றின் [[கழிமுகம்|கழிமுகத்தை]] அண்டி அமைந்திருந்த இப் பட்டினம், அதே ஆற்றங்கரையில் அமைந்திருந்த பண்டைய தலைநகரமான [[அனுராதபுரம்|அனுரதபுரத்துடன்]] சிறப்பான போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்திருந்த இது, தென்னிந்தியாவுடனான இலங்கையின் வணிகத் தொடர்புக்கு உயிர்நாடியாகவசதியாக விளங்கி வந்ததுடன்,இருந்தது. மிகப் பழைய காலத்திலிருந்தே இந்நகரில் தென்னிந்தியர்களே பெருமளவில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகின்றது. இதன் அருகே [[திருக்கேதீச்சரம்]] எனப்படும் புகழ் பெற்ற [[சிவன்கோயில்]] இருந்தது. இக்கோயிலின் மீது தேவாரம் பாடிய [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தரும்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரும்]] மாதோட்டத்தின் சிறப்புப் பற்றியும் குறிப்புக்கள் தந்துள்ளார்கள்.
 
==பண்டைய மாதோட்டத்தின் முக்கியத்துவம்==
"https://ta.wikipedia.org/wiki/மாதோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது