புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''புராணம்''' புராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலைய...
(வேறுபாடு ஏதுமில்லை)

11:22, 9 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

புராணம் புராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில்தான் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, "காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப்பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன". "புராணம் என்கிற வடசொல், புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்பர். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் 'Myth'என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos'என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.

புராண ஆசிரியர் சைவப் புராணங்களில் புராணக்கதைகளை முதலில் கூறியது சிவபெருமான் அல்லது முருகப் பெருமான் என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது. பார்வதிதேவியோ அல்லது நந்தியோ அக்கதைகளைக் கேட்டு கைலாயத்திலிருக்கும் சனக்குமாரர்களுக்குக் கூறுகின்றனர். அவர்கள் அக்கதைகளை வேதவியாசருக்கு எடுத்து விரித்துக் கூறுகின்றனர். வேதவியாசர் புராணக்கதைகளைப் பூமியிலே சூதமுனிவருக்குக் கூறுகிறhர். சூதமுனிவர் அவற்றைப் சவுனகமுனிவர்களுக்குக் கூறுகிறார்.

மகாபுராணங்கள் அனைத்தையும் இயற்றியவர் வேதவியாசர் . வேதவியாசர் சிரஞ்சீவிகளுள் ஒருவர் ஆவார். ஜீவித்தல் என்பதற்கு, உயிர்வாழ்தல் என்று பொருள். சிரஞ்சீவிகள் என்றால் எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்று பொருள்படும். "அஸ்வத்தாமர், வேதவியாசர், பரசுராமர், விபீசணர், அனுமார், மகாபெலி, மார்க்கண்டர் ஆகிய ஏழுபேரும் சிரஞ்சீவிகள் ஆவர்". அழிவின்றி வாழ்பவர்கள் பட்டியிலில் இரண்டாவதாக வேதவியாசர் குறிப்பிடப்படுகிறார்.

திருப்பூவணப் புராணத்திலே

"கூனலம்பிறைமிலைச்சுகோடீரபாரத்தெந்தை யூனமிலுமையாள்கேட்பவுரைத்தருளுபதேசத்தை யானதோர்காலைதன்னிலாறுமாமுகங்கொடுற்ற ஞானவானதனைக்கேட்டுநந்திபானவின்றான்மன்னோ" (பாடல் 688) என்ற பாடலிலே, உமையாள் கேட்டுக்கொண்டதற்கு இசைய சிவபெருமான் புராணத்தைக் கூறியருளுகிறார். அதனைக் கேட்ட ஆறுமுகங்கொண்ட முருகப் பெருமான் நந்திக்கு எடுத்துரைக்கிறார்.

".... கந்தனிசைத்திடவந்நந்தி தன்றனிச் சொல்சற்குமரன் கொடே வென்றிவேதவியாதற்குரைக்கவளஃ தன்றெனக்கவன் சொன்னதறைகுவேன்" (பாடல் 98) என்று சூதமுனிவர் கூறியதாகக் கூறப்பெற்றுள்ளது.

புராணங்கள் கூறப்பட்ட இடம் வேதவியாசர் புராணக்கதைகளைக் கூறுகிறார். அவற்றைக் கேட்ட சூதமுனிவர் அக்கதைகளை சவுனக முனிவர்களுக்கு எடுத்துரைக்கிறhர். புராணங்களை எடுத்துரைத்த இடம் நைமிசாரண்யம் ஆகும். இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பத்துப் பாசுரங்கள்) செய்யப்பெற்றது. நைமி அல்லது ​நேமி என்றால் சக்கரம் என்றும், ஆரண்யம் என்றால் அடர்ந்தகாடு என்றும் பொருள்.

புராணங்கள் தோன்றிய காலம் புராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துள்ளியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன.

தொல்காப்பியத்தை எழுதிய புலவரும், திருக்குறளை இயற்றிய புலவரும் தங்களது பெயர், ஊர், வாழ்ந்த காலம், நூலை இயற்றிய ஆண்டு, ஆட்சி செய்த மன்னர் இவை எதையுமே குறிப்பிடவில்லை.

இவர்களைப் போன்றே, புராணத்தை எழுதிய முனிகளும் தங்களது பெயர், வாழ்ந்த காலம், ஆட்சி செய்த மன்னன் இவைபற்றி எதையும் புராணங்களில் குறிப்பிடவில்லை. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7-ஆம் நு}ற்றhண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தொpவித்துள்ளனர்.

கி.பி. 300-600 காலகட்டங்களில் வடநாட்டை ஆண்ட குப்தர்கள் வடமொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம் என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.

திருப்பூவணப் புராணத்தில், சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி.

திருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே, "மேவுமந்தமிகுந்திரையாயுக மோவில்பல்புகழோங்குநளன்றனக் கியாவுநல்கியிருங் கலி தீர்த்தருள் பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன்" (பாடல் 1325) என்று கூறப்பட்டுள்ளது. எனவே கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் என்பதும், அவனது ஆட்சிக்காலத்திற்குப் பிறகே பிரமகைவர்த்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் உறுதி. கலியுகம் தோன்றி 5108 ஆண்டுகள் ஆகின்றன . எனவே பிரமகைவர்த்த புராணம் எழுதப் பெற்ற காலம் (கலி5108 - கி.பி.2008 - 3100) கி.மு.3100க்குப் பிற்பட்டகாலம் எனத் திருப்பூவணப் புராணத்தின் வழியாக அறியமுடிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புராணம்&oldid=553800" இலிருந்து மீள்விக்கப்பட்டது