துளசிதாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{mergeto|துளசிதாசர்}} |
சி {{mergefrom|துளசிதாஸ்}} |
||
வரிசை 1:
{{mergefrom|துளசிதாஸ்}}
பாரத தேசத்தின் முக்கிய பெருங்காப்பியமான இராமாயணத்தை மூன்று முக்கிய பெருமக்கள் வெவ்வேறு காலங்களில் வெவேறு மொழிகளில் வழங்கி இருக்கிறார்கள். வான்மீகி முனிவர், வடமொழியில் மூலகாவியமாக இராமாயணத்தினை 24000 சுலோகங்களாகப் பாடியுள்ளார். சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் (பனிரெண்டாம் நூற்றாண்டு என்போரும் உளர்) கம்பர், தமிழில் 12000 விருத்தப்பாக்களால் இராமாயணத்தினை இயற்றினார். பதினாறாம் நூற்றாண்டில் இந்தியில் இராமாயணத்தினை, 'இராமன் சரித மானஸ்' என்கிற பெயரில் பக்திரசம் சொட்டச் சொட்ட எழுதினார் துளசிதாசர்.
துளசிதாசர் இராமாயணம் எழுதும் முன் திவ்ய தேச யாத்திரையாக இராமேசுவரம் வந்ததாகவும் அங்கே கம்பராமாயணத்தினைக் கேட்கும் பேறு பெற்றதாகவும் கம்பன் காவியத்தின் நயங்களை தன்னுடைய காதையில் பல இடங்களில் கையாண்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
==பிறப்பும் இளமையும்==
உத்திரப்பிரதேசத்தில் பிரயாகைக்கு (காசி) அருகில் உள்ள பாந்தா மாவட்டத்தில் ராசாப்பூர் கிராமத்தில் ஆத்மாராம் துபே என்பவருக்கும் ஹுலேசி அம்மையாருக்கும் மகனாக 1554-ல் பிறந்தார் துளசிதாசர். இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய நிலையில் வால்மீகி இராமாயணக் கதையை மக்களிடையே பிரச்சாரமாகச் சொல்லி அதன் பலனாக வாழ்க்கையை நடத்தி வந்தார்.உரிய வயதில் இரத்தினாவளி என்கிற பெண்ணை மணந்தார். அவர் இராமபக்தியும் அறிவும் பெற்ற குணசீலியாக இருந்தார்.
==மனைவியால் பெற்ற ஞானம்==
ஒருசமயம், இரத்தினாவளி அம்மையார் தன் பெற்றோர் வீட்டுக்குப் போயிருந்த போது, பிரயாகையில் தனித்திருந்த துளசிதாசருக்கு, மனைவியின் எண்ணமும் காமமும் மிக, பெருமழை பெய்த நள்ளிரவில், கடுவழி நடந்து கங்கையைக் கடந்து, மனைவியின் இல்லத்தை அடைந்து கதவைத் தட்டினார். கணவரின் கோலத்தையும் எண்ணத்தையும் அறிந்து வருத்தம் கொண்ட இரத்தினாவளி அம்மையார், "எலும்பும் சதையுமான இந்த சரீரத்தை விரும்பி இந்த நள்ளிரவில் கங்கையைக் கடந்து இவ்வளவு சிரமப்பட்டு உயிர்த்தியாகம் செய்யாத குறையாக இப்படி கோரமாக வந்து நிற்கிறீர்களே; இந்த மோகத்திலும் தியாகத்திலும் கடுகளவு அந்தப் பரந்தாமன் இராமன் மீது பக்தியாக வைத்திருந்தால் இந்தப் பிறவி சாகரத்தையே தாண்டி விடலாமே" என்று அறிவுறுத்த துளசிதாசர் அந்தக் கணமே மோகத்தை விட்டொழித்து இல்லறம் துறந்து மோனத்தை நாடிச் சென்றார்.
இராமநாமத்தை மூலமந்திரமாக கொண்டு 14 ஆண்டுகள் நாடுமுழுதும் பல சேத்திரங்களுக்கும் சென்றார்.
==இராமன் சரித மானஸ்==
பின்னர் வால்மீகி இராமாயணத்தை ஊரூராகச் சென்று சொற்பொழிவாற்றினார். ஆஞ்சநேயர் குஷ்டரோகியாக வந்து நாள்தோறும் இவருடைய சொற்பொழிவைக் கேட்டு ரசித்ததாகவும் பின்னொருநாள் இவருக்குக் காட்சி தந்ததோடு இராமலக்குவனாரின் காட்சியையும் காண வைத்ததாகக் கூறப்படுகிறது.
இமயத்திலிருக்கும் மானஸரோவரின் அருகில் பக்திச் சூழ்நிலையில் தான் அனுபவித்துப் பெற்ற இராம மகிமையினை கி.பி.1631-இல் அயோத்தி நகரில் தொடங்கி இரண்டு ஆண்டுகள், ஏழு மாதங்கள், இருபத்தாறு நாட்களாக எழுதி காசி விசுவநாதர் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்தார்.
==மரணம்==
தன் 126-ஆம் வயதில் "இராம இராம" என்று செபித்தபடியே தன் இல்லத்தில் மரணமடைந்தார். இவருடைய இல்லம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவருடைய இராமாயணம் வட இந்தியா முழுதும் பிரபலம் அடைந்து ஒவ்வொரு வீட்டிலும் பக்திக் கருவூலமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
==குறிப்புதவி==
"துளசி தாசர் இராமாயணம் - முதல்பாகம்" - நெல்லை மாவட்டக் கம்பன்கழக வெளியீடு (1983)
[[பகுப்பு:இராமாயணம்]]
|