மகாயான பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:महायान
சி தானியங்கிஇணைப்பு: ka:მაჰაიანა; cosmetic changes
வரிசை 2:
'''மகாயானம்''' ( [[சீன மொழி|சீனம்]]: 大乘, ''Dàshèng''; [[ஜப்பானிய மொழி|ஜப்பானியம்]]: 大乗, ''Daijō''; [[கொரிய மொழி]]: 대승, ''Dae-seung''; [[வியட்னாமிய மொழி]]: ''Đại Thừa''; [[திபெத்திய மொழி]]: ''theg-pa chen-po''; [[மங்கோலிய மொழி]]: ''yeke kölgen'') [[பௌத்தம்|புத்த]] மதத்தின் இரு பெரும்பிரிவுகளின் ஒன்றாகும். மகாயான பௌத்தம் [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] நாடுகளில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்கிறது.
 
== சொற்பொருளாக்கம் ==
 
மகாயானம் என்ற சொல் ''மஹா'' மற்றும் ''யானம்'' ஆகிய இரு சொற்களால் ஆனது. யானம் என்ற சொல்லுக்கு வழி, பாதை என பொருள்<ref>MW சமஸ்கிருத மின்னகராதி சோதனை பதிப்பு 1.5</ref> கொள்ளலாம். எனவே, மகாயானம் என்பது '''பெரிய வழி''' அல்லது '''சிறந்த வழி''' என பொருள் கொள்ளலாம். [[பௌத்தம்|பௌத்தத்தின்]] பல பிரிவுகளை விட இது சிறந்தது என்பதையே இந்த பெயர் குறிக்கிறது. மகாயானத்தில் பிற பிரிவுகள் '''[[ஹீனயானம்]]''' அதாவது '''தாழ்வான வழி''' அல்லது '''குறைபாடுள்ள வழி'''' என குறிப்பிடப்படுகிறது.
 
== தோற்றம் ==
 
மகாயான பௌத்தத்தின் தோற்றம் சர்ச்சைக்குரியது. ஏனெனில் மகாயான பௌத்தக் கருத்துக்கள் உண்மையில் [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] போதனையா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனாலும் மகாயான பௌத்தர்கள், தங்கள் பிரிவு புத்த பகவானாலே உருவாக்கப்பட்டது என கருத்து தெரிவிக்கின்றனர். மகாயான கருத்தின்படி புத்தர் அழிவற்றவர் ஆவார்.மகாயான பௌத்தர்கள், பல [[போதிசத்துவர்|போதிசத்த்வர்]]கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர்.
வரிசை 14:
மகாயான பௌத்தம், [[கி.பி.]] [[1 நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டில்]] [[தென்னிந்தியா]]வில் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மகாயான பௌத்தம் குஷன் அரசர்களால் பரப்பப்பட்டது. லோகக்ஸேமா என்ற குஷன் அரசர் தான் முதன் முதலில் ஒரு மகாயான சூத்திரத்தை சீன மொழியில் மொழிபெயர்த்தார்
 
"மகாயானா" என்ற சொல்லின் பயன்பாடு, முதன்முதலில் [[தாமரைச் சூத்திரம்|தாமரை சூத்திரத்தில்]] காணப்படுகிறது. இந்த தாமரைச் சூத்திரத்தில் கி.பி [[5ம் நூற்றாண்டு|ஐந்தாம் நூற்றாண்டிலேயே]] மகாயான பௌத்தம் மிகுந்த செல்வாக்குடன் திகழ ஆரம்பித்தது. மகாயான பௌத்தம் [[சீனா]], [[தாய்வான்]], [[கொரியா]], [[வியட்னாம்]], [[திபெத்]] முதலிய பல நாடுகளுக்கு மிக வேகமாக பரவியது.
 
மகாயான பௌத்தத்திலிருந்தே தந்திர பௌத்தமான [[வஜ்ரயான பௌத்தம்]] தோன்றியது. மேலும் இந்த வஜ்யான பௌத்தம் திபெத், [[பூட்டான்]], [[மங்கோலியா]] போன்ற நாடுகளுக்கு பரவியது
வரிசை 24:
மகாயானம் ஒரு மிகப்பெரிய [[மதம்|மத]] மற்றும் [[சித்தாந்தம்|சித்தாந்த]] அமைப்பாகும். [[பாளி]] சூத்திரங்களுக்கு மேலும் பல பௌத்த சூத்திரங்களை மகாயானம் கொண்டுள்ளது. மகாயான புத்த பகவானின் தர்மத்தை மிகவும் ஆழமாக ஊடுருவக்கூடிய ஒன்றாகத் தன்னைக் கருதுகிறது. இதனாலேயே பல அடிப்படையான பௌத்தக் கருத்துகளில் அது தன் நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. உதாரணமாக மகாபரிநிர்வாண சூத்திரத்தில் புத்தர், தன்னுடைய ஆரம்ப காலக் கருத்துகள் சிறு குழந்தைகள் போல் மன நிலைமை கொண்டவர்களுக்கே என்றும், அவர்களின் அக்கருத்துகளை ஏற்று மனம் பக்குவம் அடைந்ததும் அவர்கள் மகாயான தத்துவங்களை ஏற்றுக்கொண்ட பக்குவம் அடைந்தவர்களாக இருப்பர் என்றும் கூறுகிறார்.
 
=== தேரவாத பௌத்தம் ===
{{main|தேரவாத பௌத்தம்}}
மகாயான சித்தாந்தம், பாரம்பரிய [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்தத்தி]]ல் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயானத்தில் துக்க நிவாரணத்தினால் [[நிர்வாணம்]] அடைவதென்பது இரண்டாம் பட்சமானது. மகாயான சித்தாந்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள். போதிசத்துவர்கள் தங்களை மற்ற உயிர்கள் நிர்வாணம் அடைவதற்கு உதவுவதற்காக தாங்கள் புத்தத்தன்மை அடைவதை தாமதப்படுத்துபவர்கள்.
 
=== ஸென் பௌத்தம் ===
{{main|ஸென் பௌத்தம்}}
[[ஸென் பௌத்தம்]] போதிசத்துவர்களை அல்லாது தியானத்தை மையமாக கொண்ட மகாயான பௌத்த பிரிவாகும். மகாயானத்தில் புத்த பகவான் மிகவும் உச்ச நிலையில் உள்ள ஒருவர், அவர் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருப்பவர் மற்றும் போதிசத்த்வர்கள் பிறர் நலத்துக்காக தான் போதி நிலை அடையாதவர்கள்.
 
=== அடிப்படைத் தத்துவம் ===
எல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவம். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும். சில மகாயான பிரிவுகளில், [[மோட்சம்]] ஒரு புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள பக்தியினாலும் நம்பிக்கையினாலும் மட்டுமே எளிதாக அடைந்துவிடலாம். இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது, அதன் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். [[சுகவதி பௌத்தம்|சுகவதி பௌத்தத்தில்]] [[அமிதாப புத்தர்|அமிதாப புத்தரின்]] பெயரை உச்சரிப்பதாலேயே மோட்சம் கிடைத்துவிடுவதாக நம்புகின்றனர். மேலும் மந்திரங்கள் மற்றும் தாரணிகளை உச்சரித்தல், மகாயான சூத்திரங்களைப் படித்தல் முதலிய செயல்களாம் நல்ல கர்மத்தை சம்பாதிக்கலாம் என்பது மகாயனத்தின் ஒரு கருத்து.
 
மகாயான பௌத்தத்தில், ஒரு மகாயான சூத்திரத்தின் மீதும் அதன் கருத்துகள் மீதும் உறுதியாய் இருத்தல் தர்மத்திற்கான ஒரு தலைசிறந்த செயலாகும். மகாயான சூத்திரங்கள் தெய்வீகத்தன்மை உடையதாக நம்பப்படுகின்றன. அதை வாசிப்பதால் ஒருவருடைய தீய கர்மங்கள் விலை நல்ல கர்மங்கள் ஒருவருக்கு கிடைக்கின்றது.
 
=== ஆதி கால பௌத்தத்தின் தாக்கம் ===
 
பல அறிஞர்களின் கூற்றுப்படி, மகாயான சித்தாந்தம் ஆதி காலப் பௌத்தத்தின் கருத்துகளை அடிப்படையக கொண்டு எழுந்த ஒரு பிரிவாகும். மகாயான பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் அடிப்படை பௌத்த கருத்துகளின் வேறுபாடு இல்லை. மகாயானத்தில் வித்துகள் பழமையான தேரவாத பௌத்தத்திலும் காணப்படுகின்றன. ஜாதகக் கதைகளில் உள்ளது போல், புத்த பக்தி, போதிசத்துவம் முதலிய கருத்துகள் இரண்டு பிரிவிகளுக்கும் பொருந்தும், மகாயானம் புத்தரின் தெய்வீகத்தன்மைக்கு அதிக முக்கியவம் அளித்தது, மாறாக தேரவாதம் அவருடைய மனித இயல்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தது.
வரிசை 43:
பல ஆதி கால மகாயான சூத்திரங்களில், புத்த பகவான் துஷீத லோகத்திலிருந்த அவதரித்த கதைகளும், பல [[தேவர்]]கள், [[நாகர்]]கள், காந்தர்வர்கள் முதலியவர்கள் புத்த பகவானை வணங்கிய கதைகளும் காணக்கிடைக்கின்றன. எனவே இவற்றிலிருந்தே மகாயன சூத்திரங்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
== மகாயான பௌத்தத்தின் கூறுகள் ==
 
* ''''அனைவருக்கும் மோட்சம்''''
* ''''போதிசித்தம்''''
* ''''கருணை''''
* ''''ரட்சிப்பு''''
* ''''ததாகதகர்ப தத்துவம்''''
 
தத்துவம் சார்ந்த மகாயான பௌத்தம் முதல் மூன்று கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. மாறாக பக்தி சார்ந்த மஹயானம் இறுதி இரண்டு கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருகின்றது.
 
=== அனைவருக்கும் மோட்சம் ===
 
மகாயானத்தில் அருகத்தன்மை அடைவது இறுதியான நிலையல்ல. அருக நிலைக்குப் பிறகு சம்யக்சம்புத் தன்மையை அடைவதே இறுதியான நிலையாகும். புத்தர்கள் இறக்கும் போது நிர்வாணமும், இறந்த பிறகு மகாபரிநிர்வாணமும் அடைகின்றனர். அந்த நிலையே புத்தத்தன்மை ஆகும். மகாயான கருத்துகளின் படி அனைவரும் ஒரு காலக்கட்டத்தில் சம்யக்சம்புத்தன்மையை அடைவர்.
வரிசை 59:
அனைவரும் போதி நிலையை அடையத் தகுந்தவர்கள் என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்று. மற்ற பிரிவுகளில் துறவு சார்ந்த வழியை பின்பற்றுபவர்களுக்கே போதி கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. அனால் மகாயனத்தில், பாமரர்களும் எளிதாகப் பல்வேறு வழிகளில் போதி நிலையை அடைய இயலும்.
 
=== போதிசத்துவம் ===
{{main|போதிசத்துவர்}}
 
வரிசை 66:
மகாயான பௌத்தத்தின் முக்கியமான குறிக்கோள் [[போதிசித்தம்]]. போதிசித்தம் என்பது மற்ற உயிர்கள் வீடுபேறு அடைவதற்காகப் புத்ததன்மையை அடைய நினைக்கும் நிலை ஆகும். ஒரு சிறந்த [[போதிசத்துவர்|போதிசத்துவராகத்]] திகழ, மகா காருண்யம், பிரக்ஞை, சூன்யத் தன்மையை உணருதல் மற்றும் ததாகதகர்ப தனமையை உணரக்கூடிய ஒரு மேன்மையான மனம் தேவைப்படுகிறது. இந்த மன நிலையில் தான் ஒரு போதிசித்தத்தை உணர இயலும். போதிசத்துவத் தன்மைக்குத் தேவையான ஆறு ஒழுக்கங்கள் தானம், சீலம், சாந்தி(பொறுமை),வீர்யம், தியானம் மற்றும் பிரக்ஞை.
 
=== கருணை ===
 
கருணை, என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்றாகும். கருணை என்பது போதிசித்ததிற்க்கு அத்தியாவசியமான ஒரு குணம். மகாயான பௌத்தத்தின் படி, கருணையினால் ஒருவருடைய நல்ல கர்மங்களை மற்றவர்களுக்கு அளிக்கலாம்.
வரிசை 74:
மகாயானத்தில் மோக்‌ஷம் என்பது அனைவருக்கும் உரியது. எனவே ஒரு சுய துக்கத்திலிருந்து விடுபடுவதை விட, மற்றவர்களுக்கு கருணையுடன் உதவி புரிதல் முக்கியமாகும்.
 
=== உபாயம் ===
 
உபாயம் என்ற சொல் முதன்முதலில் [[தாமரைச் சூத்திரம்|தாமரைச் சூத்திரத்தில்]] இடம் பெற்றது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். 'உபாயம்' என்றால் போதி நிலை அடைவதற்காக ஏற்படுத்தப்படும் ஒரு முறை அல்லது தந்திரம். இந்த முறையினை பயன்படுத்தி ஒருவர் போதி நிலை அடைவதற்க்கு உதவி செய்யலாம். அதாவது ஒருவர் போதித்தன்மை அடைய எளிதாக்க பயன்படுத்தக்கூடிய ஒரு உபாயம். அனைவராலும் தர்மத்தையும், போதியையும் உணருதல் இயலாது. எனவே அவர்களும் இதை அடைய அவர்களுக்கு தகுந்தாற்போல் ஒரு உபாயத்தை நாம் கையாளவேண்டும். எந்த முறை புத்தத்தர்மத்தை உணரவைக்கிறதோ அதை உபாயம் என்று அழைக்கலாம்,
 
=== ரட்சிப்பு ===
 
மகாயானத்தில், பல தேவர்களும், போதிசத்துவர்களும் வெவ்வேறு லோகங்களின் வசிக்கின்றனர். அவர்களின் உதவியோடு ஒருவர் போதி நிலையை எளிதாக அடையலாம். [[திரிகாயம்|த்ரிகாய]] தத்துவம், புத்தரை கடவுள் போன்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.
வரிசை 86:
எனவே போதி நிலை, தன் சொந்த முயற்சியால் அல்லாது பல்வேறு புத்தர்களினாலும் போதிசத்துவர்களினாலும் கிடைக்கும் என்பது மகாயானத்தின் தத்துவம்.
 
=== ததாகதகர்ப தத்துவம் ===
{{main|ததாகதகர்ப தத்துவம்}}
 
வரிசை 96:
{{main|மகாயான சூத்திரங்கள்}}
 
தேரவாத பௌத்ததை போல், மகாயான பௌத்தமும் தனது கருத்துகளை சூத்திரங்களில் பதிவு செய்துள்ளது. தேரவாத பாலி சூத்திரங்களுடன் சேர்ந்து பல்வேறு கூடுதலான சூத்திரங்களை தன்பால் கொண்டுள்ளது. மகாயான நூல்கள் கி.பி முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இயற்றாப்பட்டு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
 
இவற்றுள் முக்கியமான சூத்திரங்களாவன, தாம்ரை சூத்திரம், பிரக்ஞா-பாரமித சூத்திரம், அவதம்சக சூத்திரம், விமல கீர்த்தி சூத்திரம் மற்றும் நிர்வான சூத்திரம்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[அவலோகிதேஷ்வரர்]]
* [[பைஷஜ்யகுரு]]
* [[போதிசத்துவர்]]
* [[மகாயான சூத்திரங்கள்]]
* [[ஆதி கால புத்தம்த பிரிவுகள்]]
* [[புத்தமத பிரிவுகள்]]
* [[சூன்யத்தன்மை]]
* [[புத்தத்தன்மை]]
* [[ததாகதகர்பம்]]
* [[தாமரை சூத்திரம்]]
* [[சுகவதி பௌத்தம்]]
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.buddhism-dict.net/ddb/ பௌத்த மின் அகராதி]
* [http://sacredlibrary.googlepages.com/religioustexts.htm Sacred Library] மகாயான சூத்திரங்கள்
* [http://www.berzinarchives.com/comparison_buddhist_traditions/index.html பௌத்த பிரிவுகளின் ஒரு ஒப்புறவு]
* [http://www4.bayarea.net/~mtlee/ ஆங்கிலத்தில் மகாயான சூத்திரங்கள்]
* [http://www.nirvanasutra.org.uk மகாபரிநிர்வாண சூத்திரம்]
* [http://www.webspawner.com/users/bodhisattva/index.html ஆங்கிலத்தின் ததாகதகர்ப சூத்திரங்கள்]
* [http://www.lioncity.net/buddhism/index.php?showforum=4 இ-சங்கா புத்த ஃபாரம்]
* [http://americanbuddhist.net/ American Buddhist Net: பௌத்த செய்திகள்]
* [http://feeds.feedburner.com/MahayanaBuddhismMahayanaNewsBuddhismMahayanaOutlineBuddhistMahayanaText-Navayana Mahayana பௌத்த செய்தி சேகரிப்பாளன்]
 
 
[[பகுப்பு:மகாயான பௌத்தம்| ]]
வரி 151 ⟶ 150:
[[it:Buddhismo Mahayana]]
[[ja:大乗仏教]]
[[ka:მაჰაიანა]]
[[ko:대승]]
[[lt:Mahajana]]
"https://ta.wikipedia.org/wiki/மகாயான_பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது