தென்கிழக்காசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவு
சி விரிவு
வரிசை 22:
ஏறத்தாழ 30 குட்டி அரசுகள், சுவர்ணபூமியில் தோன்றி மறைந்துள்ளதாக தடயங்கள் கூறுகின்றன. இந்த அரசுகளின் ஆட்சிக் காலமும் குறுகிய காலமாக இருந்துள்ளது, அதற்குக் காரணம், வடக்கில் [[கம்போடியா]]வில் மிகப் பெரிய இந்துப் பேரரசுகளான ‘அங்கோர் வாட்’ பேரரசும், தெற்கில் [[ஜாவா]]வில் இந்து அரசான ‘மாஜாபாகிட்’ அரசும் தலையெடுத்ததுதான்.
 
7-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து, 13-ஆம் நூற்றாண்டுவரை [[சிறீ விஜயம்]] எனும் இந்துப் பேரரசு தென் கிழக்காசிய பகுதிகளில் பெரும்பகுதிகளை ஆண்டு வந்தது. சிறீ விஜயத்தின் பேரரசும் வடக்கு [[சுமத்திரா]] முனையிலிருந்து, மயூரடிங்கம், மாப்பாலம், மேவிலிம்பங்கம், மாடமாலிங்கம் ( அனைத்தும் சுவர்ணபூமி தீபகற்பத்தில் வடப்பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்), யவத்வீபம் (ஜாவா தீவு ) வரை பரவியிருந்தது. இருப்பினும் 11-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் சோழசோழப் சாம்ராஜ்யத்தின்பேரரசின் மன்னராக திகழ்ந்த முதலாம் [[இராஜேந்திர சோழன்]] அவரின் தலைமையில் மிகப் பெரிய கடற்படை ஒன்று கடராத்தின் அரசு சம்பத்தப்பட்ட உட்பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு, கடாரத்தின் மீது படையெடுத்தது. முடிவில் சிறீ விஜயம் பின்வாங்கி அடிபணிந்தது, கடாரம் [[சோழர்|சோழ]] நாட்டு இராஜ்ஜியத்தின் கீழ் சேர்ந்தது.
 
கடாரத்தின் மீது படையெடுத்த சோழப் பேர ரசிடம், 3 வகையான [[மரக்கலம்|மரக்கலங்கள்]] (மரத்தினாலான [[கப்பல்]]கள்) இருந்துள்ளதாக வரலாறு கூறுகின்றன.மரக்கலங்களுக்கு பொறுப்பெற்றிருப்பவர்களை கலபதி என அழைப்பர்.
#நெருங்கிய போகுவரத்துத் தொடர்பிற்கு, சிறு ரக மரக்கலங்கள்.
#வணிக நிமித்தம் பண்டங்களையும், இதர பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்கு பெரிய மரக்கலங்கள்.
#கடல் கடந்து [[போர்]]ப் புரியக்கூடிய அதி நவீன வசதிகள் கொண்ட மிகப் பெரிய மரக்கலங்கள்.
 
== ஆசியாவின் மற்ற மண்டலங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தென்கிழக்காசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது