'''வேதாந்தம்''' வேதம் + அந்தம் என்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] சொற் பிணைப்பினால் வருவது. [[வேதம்]] அல்லது வேதங்கள் நான்கு ஆரிய சமய தத்துவ நூல்களைக் குறிக்கும். அவை [[இருக்கு வேதம்|இருக்கு]], [[யசுர் வேதம்|யசூர்]], [[சாம வேதம்|சாமம்]], [[அதர்வ வேதம்|அதர்வம்]] எனபனவாகும். அந்தம் என்றால் கடைசியில் வருவது அல்லது முடிவில் வருவது என்று பொருள் தரும். ஒவ்வொரு வேதத்துக்கும் நான்கு பாகங்கள் உண்டு. அவை [[மந்திரம் (வேத உறுப்பு)|மந்திரங்கள்]], [[பிராமணம்|பிராமணங்கள்]], [[ஆரண்யகம்|அரண்யகங்கள்]], [[உபநிடதம்|உபநிடதங்கள்]] ஆகும். வேதம் + அந்தம் வேதங்களின் கடைசி இரு பாகங்களான அரண்யகம் மற்றும் உபநிடதங்களை சிறப்பாக சுட்டும். வேதங்களின் கடைசி இரு பாகங்களும் பெரும்பாலும் தத்துவரீதியில் அமைந்தவை, அவற்றில் கூறப்பட்ட பல கருத்துக்கள் முதல் இரு பாகங்களில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பாகவும், முரணாகவும் இருப்பதைக் காணமுடியும். ஆகையால் வேதாந்தத்தை வேதம் என்று நேரடியாக ஒப்பிடுவது பொருந்துமா என்பது கேள்விக்குரியதே.