ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 32:
செல்வக் கடுங்கோ நேரிமலை நாட்டை வென்றான். காந்தள் மலரில் தேனுண்ட வண்டு நேரிமலையின் உச்சியிலுள்ள சூர முள்ளில் அமர விரும்பிப் பறக்கும்போது அதன் சிறகு அழியும்.<br />செல்வக்கடுங்கோ பல போர்களில் வெற்றி கண்டவன். அவனது சான்றோர் வெண்கொன்றை மாலை அணிந்திருப்பர். வாள் வெட்டிய காயத் தழும்பு உடையவர். மருப்பு, மூரிப்பறை, சங்கு ஆகியவற்றைக் கொண்டுசெல்பவர்.<br />கொடுமணம் என்னும் ஊரில் வாழ்ந்த பாணர் பந்தர் என்னும் பெயருடன் புகழ் பெற்று விளங்கிய ஊரில் சான்றோர் மெய்ம்மறையாய்ப், போருக்குப் பின் தங்கியிருந்த இருப்பிடத்தை நாடிச் சென்றனர். சென்றவர்கள் முத்தும், பொன்னணிகளும் பெறுவார்கள் என்கிறார் புலவர்.
'''பாடல் 68 - ஏம வாழ்க்கை'''
செல்வக் கடுங்கோவின் படைமறவர், பகைவர் உறையும் இடங்களை தமதாக்கிக்கொண்டு, பகைவரின் யானைத் தந்தங்களைத் தம் ஊரிலுள்ள கடைத்தெருவில் கள்ளுக்கு விற்று, குடித்துவிட்டு, அச்சமே இல்லாமல் அமைதியாக வாழ்ந்தனர். (வடபுலம் என்று போற்றப்படுவது வானுலகம்) மறவர் இந்த வடபுல வாழ்க்கையை மண்ணுலகில் துய்த்தனர். யாருடன்?<br />கணவர் பிரிந்திருந்த நாட்களைச் சுவரில் கோடு போட்டு எண்ணிக்கொண்டிருந்த மனைவிமாரோடு சேர்ந்து துய்த்தனர்.
[[பகுப்பு:பதிகம்]]
|