[[தமிழ்ச் சூழல்|தமிழ்ச் சூழலில்]] வளர்ச்சி பெற்ற இசை முறைமை '''தமிழிசை''' ஆகும். குறிப்பாக இது [[தமிழர்]]களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. [[தாலாட்டு|தாலாட்டில்]] இருந்து [[ஒப்பாரி]] வரை [[தமிழர்]] வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. [[இயல்]], இசை, [[நாடகம்]] என்று [[தமிழ்|தமிழை]] [[முத்தமிழ்|முத்தமிழாகப்]] பாகுபடுத்தி, இசைக்கு முன்னுருமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் [[பண்]] இசை, செவ்வியல் தமிழ் இசை, [[பக்தி இசை]], [[தமிழ் நாட்டார் பாடல்கள்|நாட்டார் இசை]], [[தமிழ் திரையிசை|திரையிசை]], [[தமிழ் ராப் இசை|சொல்லிசை]] என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன, வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்டுக்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.