தமிழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழிசை" (using HotCat) |
No edit summary |
||
வரிசை 1:
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
:: '''குறிப்பு: இக் கட்டுரை தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. '''
[[தமிழ்ச் சூழல்|தமிழ்ச் சூழலில்]] வளர்ச்சி பெற்ற இசை '''தமிழிசை''' ஆகும். குறிப்பாக இது [[தமிழர்]]களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. [[தாலாட்டு|தாலாட்டில்]] இருந்து [[ஒப்பாரி]] வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. [[இயல்]], இசை, [[நாடகம்]] என்று [[தமிழ்|தமிழை]] [[முத்தமிழ்|முத்தமிழாகப்]] பாகுபடுத்தி, இசைக்கு முன்னுருமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் [[பண்]] இசை, செவ்வியல் தமிழ் இசை, [[பக்தி இசை]], [[தமிழ் நாட்டார் பாடல்கள்|நாட்டார் இசை]], [[தமிழ் திரையிசை|திரையிசை]], [[தமிழ் ராப் இசை|சொல்லிசை]] என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன, வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்டுக்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.
== ஆதாரங்கள் ==
[[தமிழ் வாய்மொழி இலக்கியம்|வாய்மொழி இலக்கியங்கள்]], [[தமிழ் இலக்கியம்|எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள்]], [[கல்வெட்டு|கல்வெட்டுக்கள்]], [[தமிழிசை ஆய்வுகள்]], [[தமிழிசை பற்றிய அயல்நாட்டார் குறிப்புகள்|அயல்நாட்டார் குறிப்புகள்]] ஆகியவை தமிழிசை பற்றிய் அறிய எமக்கு உதவுகின்றன. [[சங்க இலக்கியம்|சங்க நூல்களான]] [[தொல்காப்பியம்]], [[கூத்தநூல்]], [[பரிபாடல்]], [[புறநானூறு]], [[அகநானூறு]], [[பத்துப்பாட்டு]] ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன. [[பெருநாரை]], [[பெருங்குருகு]], [[பேரிசை]], [[சிற்றிசை]], [[இசைநுணுக்கம்]], [[பஞ்ச மரபு]] போன்ற தற்போது கிடைக்கப்பெறாத பல பண்டைத் தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பிற நூல்கள் வரையாக அறியமுடிகிறது.
சங்கம் மருபிய நூலான [[சிலப்பதிகாரத்தில் தமிழிசை|சிலப்பதிகாரம் தமிழிசை]] பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] [[அரும்பதவுரை]]யும், [[அடியார்க்கு நல்லாருரை]]யும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தில் எழுதப்பெற்ற [[மணிமேகலை]], [[திருமந்திரம்]], [[சீவக சிந்தாமணி]] ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. இதே காலப் பகுதியிலேயே தோன்றிய [[காரைக்கால் அம்மையார்]] அருமையான தமிழிசைப் பாடல்களை ஆக்கி உள்ளார்.
▲''முதன்மைக் கட்டுரை: [[தமிழிசை வாணர்கள்]]''
பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை [[அப்பர்]], [[திருஞான சம்பந்தர்]], [[சுந்தரர்]] முதலான [[நாயன்மார்கள்|நாயன்மார்களினது]] [[தேவாரம்|தேவாரங்களும்]], பன்னினு [[ஆழ்வார்|ஆழ்வார்களினது]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தமும்]] வளப்படுத்தின. இக் காலத்தில் இயற்றப்பெற்ற [[திவாகரம்]], [[பிங்கலம்]] போன்ற நிகண்டுகளிலும் தமிழிசைச் சொற்களுக்கு விளக்கங்கள் உள்ளன. [[பட்டினத்தார்]], [[இடைக் காட்டுச்சித்தர்]] ஆகியோரும் இக் காலத்தவரே.
பக்தி காலத்தைத் தொடர்ந்த இடைக் காலத்தில் தமிழிசை நலிவுற்று இருந்தது. எனினும் கிபி 15 ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் [[திருப்புகழ்|திருப்புகழ்]] இயற்றினார். இதில் உள்ள [[இசை]]த்[[தாளம்|தாளங்கள்]] தனித்தன்மை பெற்றவை. [[குமரகுருபரர்]], [[முத்துத் தாண்டவர்]] ஆகியோர் இக் காலத்தைச் சேர்தவர்கள்.
== வரலாறு ==
தமிழிசை வரலாற்றை ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.
* சங்க காலம் (கிமு 500+ - கிபி 300)
* சமணர் காலம் (கிபி 300 - கிபி 600)
* பக்தி காலம்
* இடைக் காலம்
* தற்காலம்
== மேற்கோள்கள் ==
வரி 62 ⟶ 40:
* [http://anniyalogam.com/go.php?u=isaiinbam/2008/07/blog-post_11.html உளியின் ஓசை - ராஜாவின் ஓசை ]
* [http://vallinam.com.my/issue2/essay3.html தமிழிசை மீட்போம்]
* [http://www.tamilvu.org/courses/diploma/d041/d0413/html/d0413557.htm இசைத்தமிழ்]
* [http://www.pudhucherry.com/pages/tyaga21.html தமிழிசை வரலாறு - ஒரு விளக்கம்]
[[பகுப்பு:தமிழிசை]]
|