'''புனித லாரன்சு''', 258-ஆம் ஆண்டு [[உரோமை நகரம்|உரோமை நகரில்]] கொல்லப்பட்ட ஏழு திருத்தொண்டர்களுள் ஒருவர். இவர் உரோம் நகர திருச்சபயின் சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் இருந்தார். வலேரியானின் என்ற அரசன் திருச்சபையின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க இவரை வற்புறுத்திய போது, இவர் அச்சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். இதனால் கோவமடைந்த அரசன் இவரை வாணலில் வறுத்துக் கொல்ல தீர்ப்பிட்டான் என பாரம்பரியம் கூறுகிறது. தன்னை வறுத்துக் கொண்டிருந்தவர்களிடம் "இந்தப்பக்கம் வெந்துவிட்டது... மறுபக்கம் திருப்பி போடுங்கள்.." என்று நகைச்சுவையாக கூறினார் என்பர்.