ஜோதா அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
ஜோதா-அக்பர் 16 ஆம் நூற்றாண்டு காதல் கதை, இது முகலாய பேரரசர் மாமன்னர் அக்பருக்கும் [[ரஜபுதன் |ராஜபுத்திர]] இளவரசியான ஜோதாவிற்கும் அரசியல் வசதிக்கான திருமணம் தோற்றுவித்த மெயக்காதலைப் பற்றிக் கூறும் காதல் கதை.
 
 
பேரரசர் அக்பருக்கு ([[ரித்திக் ரோஷன்|ரித்திக் ரோஷன்]]) கிடைத்த அரசியல் வெற்றிகளுக்கு எல்லையே இல்லை. [[இந்து குஷ்|இந்து குஷ்ஷைக்]] கைப்பற்றிய [[ஆப்கானிஸ்தான்|ஆப்காநிஸ்தானிலிருந்து]] [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடா]] வரையும் [[இமய மலை|இமய மலையிலிருந்து]] [[நர்மதை ஆறு|நர்மதையாற்றின்]] வரையிலும் வீழ்த்தி தனது ராஜ்யத்தின் எல்லையை விரிவுபடுத்தினார். ராஜதந்திரம், அடக்குமுறை மற்றும் காட்டுமிராண்டித்தனமான பலாத்காரம் ஆகியவைகளின் புத்திசாலித்தனமான பிரயோகம் ராஜபுத்திரர்களின் விசுவாசத்தைவிசுவாசத்தைப் பெற்றுத்தந்தது. இத்தகைய ராஜபக்தியை அனைவரும் பெற்றிருக்கவில்லை. மகாராணா பிரதாப்பும் வேறு பல ராஜபுத்திரர்களும் அக்பரை வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளராகவே கருதி வந்தனர். முகலாயர்களுக்குத் தங்கள் புதல்வியரைத் திருமணம் செய்து கொடுத்த ராஜபுத்திரர்களுக்கும் அங்ஙனம் செய்யாதவர்களுக்கும் இடையே திருமண ஒப்பந்தங்களை மகாராணா பிரதாப் தடை செய்திருந்தார். ராஜபுத்திரர்களுடனான உறவை மேலும் பலப்படுத்த ஜொலிக்கும் ராஜபுத்திர இளவரசியான ஜோதாவை ([[ஐஸ்வர்யா ராய் பச்சன்|ஐஸ்வர்யா ராய் பச்சன்]]) மணந்த பொழுது உத்தம காதல் எனும் புதிய பாதையில் தான் அடியெடுத்து வைக்கப்போவதை அக்பர் அறிந்திருக்கவில்லை.
 
ஏமேரீய அரசன் பார்மலின் புதல்வியான ஜோதா இச்சம்பந்த உறவின் மூலம் தான் வெறும் அரசியல் கைப்பாவையாகக் கருதப்படுவதை வெறுத்த காரணத்தால் அக்பரின் தற்போதைய தலையாய சவால் யுத்தங்களை வெல்வதோடு அல்லாமல் துவேஷத்தையும் தீராத காழ்ப்புணர்ச்சியையும் கொண்ட ஜோதாவின் ஆழ்மன அன்பைக் கொள்ளை கொள்வதிலும் இருந்தது. இது ஜோதா அக்பர் அவர்களது சொல்லப்படாத காதல் கதை ஆகும். <ref>{{cite web|url=http://jodhaaakbar.com/ |title=Jodhaa Akbar :: Official Website |publisher=Jodhaaakbar.com |date= |accessdate=2008-10-27}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜோதா_அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது