ரங்கா ராவ் 1925 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் (கவுன்சில் ஆஃப் ஸ்டேட்) உறுப்பினரானார்; 27 வரை அப்பதவியில் நீடித்தார். 1930 இல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் விசாகப்பட்டினம் தொகுதியில் நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1931 இல் [[இலண்டன்|லண்டனில்]] நடை பெற்ற இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் இந்திய நிலச்சுவாந்தார்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அதே ஆண்டு நீதிக் கட்சியில்[[நீதிக்கட்சி|நீதிக்கட்சியில்]] ஜமீந்தார்கள் கோஷ்டியின் தலைவரானார். நீதிக் கட்சித்நீதிக்கட்சித் தலைவரும், சென்னை முதல்வருமான [[முனுசாமி நாயுடு|முனுசாமி நாயுடுக்கு]] எதிராக கட்சிக்குள் போர்க் கொடி தூக்கினார். அமைச்சர் பதவிகிட்டாத ஜமீந்தார்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். 1932 அக்டோபரில் நடைபெற்ற நீதிக் கட்சியின்நீதிக்கட்சியின் மாநாட்டில் பெரும் குழப்பத்திற்கிடையே ரங்கா ராவ், கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்தேர்ந்தெடுக்கப பட்டார். கட்சித் தலைமையிலிருந்து வெளியேற்றப்பட்ட முனுசாமி நாயுடு ரங்கா ராவ் அடுத்து தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவார் என்ற அச்சத்தில் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பதில் நவம்பர் 5, 1932 இல், ரங்கா ராவ் சென்னை மாகாண முதல்வரானார்.<ref name="bobbili" /><ref name="peoplesking" />