எட்டுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
தொகை நுால்கள் |
||
வரிசை 1:
தொகை நுால்கள் என்பது ஐங்குறுநுாறு, குறுந்தொகை, நற்றினை, பதிற்றுப்பத்து,
அகநானுாறு, புறநானுாறு, கலித்தொகை, பரிபாடல் என்பதாகும்.
அகத்தையும் புறத்தையும் பற்றிப் பாடல்களாக இந்நுால்களைப் பகுக்கின்றனர். பரிபாடல் கடவுள்
பற்றிய பாடல்களாகவும், பாடல்கள் பெரிதும் தனிப்பாடல்கள், ஆசரியப்பாவாலியன்றவை.
பரிபாடலும் கலித்தொகையின் கலிப்பாவும் தவிர்த்துப் புறநானுற்றில் வஞ்சிப் பாடல்கள் சிலவுள்ளன.
இடத்திற்கேற்ப தேவையான துறைகளுள் பாடல்களைப் பாடியுள்ளனா். புறத்திணைகளுள் வாழ்க்கைக்கென்றும்
இன்றியமமையாத அறங்களையும், ஒழுக்கங்களையுமே வற்புறுத்தும் பாடாண் முதலிய துறைகளைப்
பாடியுள்ளனர். வெட்சி முதலிய போர்முறைகளும் துறைகளும் அனைவர்க்கும் எக்காலத்தும்
பொதுவாகாவெனக் கருதி அவற்றை மிகுதியாகப் பாடவில்லை போலும்.
கிடைத்த பாடல்களில் அகத்திற்கு நானுாறு என்பற்கேற்ப புறத்திற்கும் நானுாறு பாடல்களைத் தொகுத்தனர்.
குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகட்கும் நான்கு நுாறு என ஒரு வகையாகத் தொகை
கொண்டனர். ஐங்குறுநுாற்றுள் பாலைக்கும் ஒரு நுாறு கொண்டனர். பிற்காலத்தார் நான்கு திணைப் பாடல்களை
ஐந்திணைக்கும் பலவகையாகப் பிரித்திருக்கக்கூடும். பாடலகளின் அடியளவுகளைக் கொண்டு
பல தொகை நுால்களைத் தொகுத்துள்ளனர். மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையுமுடைய பாடல்களை
ஐங்குறுநுாறாக்கினர். ஐந்து புலவர்கள் நுாறுநுாறாகத் தொகுத்ததே பாடிய தனித்தன்மையையும்
உடையது இத்தொகை நுால். சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையென்ற
சேரன் ஆதரவால் கூடலுார்க்கிழார் இதனைத் தொகுத்தார். 4-8 அடியெல்லையினையுடைய
பாடல்களைக் குறுந்தொகை ஆக்கினர். 9-12 அடிப்பாடல்கள் நற்றிணையாக அமைந்தன. 13-31அடிப்பாடல்கள்
நெடுந்தொகையாய் அகநானுாறாயின. புறநானுாறும், பதிற்றுப் பத்தும் புறத்தை
பற்றியன. மற்றவை அகம் பற்றியன. சிறப்பாக ஒரு பகுதியைப் பேசினாலும் திணை நுால்களின்
பாடல்களை அறம் பொருள் இன்பம் என்னும் முப்பகுதிகளைப் பற்றிய உண்மைகளை இடையிடையே
தம்முள் விரவப் பெற்றுள்ளன.
அகப்பாடல்களில் அரசரின் போர்கள், கொடை ஆகியவை பற்றியும்,புறப்பாடல்களில் வாழ்க்கைக்குரிய
ஒழுக்கவுண்மைகளைப் பற்றியும் அரிய குறிப்புக்கள் செய்யப்பெற்றுள்ளன. கடையெழு வள்ளல்களைப்
பற்றிய குறிப்புக்கள் புறநானுாற்றிலும் அகப்பாடல்களிலும்மிகுதியாகக் காணப்படுகின்றன.
தம்மைப் புரந்த வள்ளல்களை நன்றியுடன் குறிப்பிடும் குறிப்புகளேஇவை. கடைச்சங்கத் தொடக்கத்தில்
இமயவரம்பம் நெடுஞ்சேரலாதனும், கரிகாலனும் இலங்கியுள்ளனர்.
அக்காலத்தாண்ட சேர சோழ பாண்டியர் சிற்றரசர்கள் குறுநில மன்னர் ஆகியயோரைப் பற்றிய குறிப்புகள்
புறநானுாற்றில் மிகுதியாகவும் அகநுால்களில் ஓரிரு வரிகளாகக் கலந்தும் காணப்படுகின்றன.
-தமிழ் இலக்கிய வரலாறு
|