பீம்சேன் சோசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 46:
1936 இல், ''சவாய் கந்தர்வா'' எனப் பிரபலமாக அறியப்படும் தார்வாதைச் சேர்ந்த ராம்பா குண்ட்கோல்கர் அவரது குருவாக இருக்கச் சம்மதித்தார். பீம்சென் ஜோஷி அவரது இல்லத்தில் ''குரு-சிஷ்யா'' (ஆசிரியர்-மாணவர்) மரபின்படி தங்கியிருந்தார், அவரது குருவிடமிருந்து இசையறிவைப் பெற்றார், அந்த வேளையில் அவரது இல்லத்தில் பகுதி நேரப் பணிகளையும் செய்துவந்தார். கீரன காரணாவிலிருந்து வந்த மற்றொரு குரலிசைப் பாடகர் [[கங்குபாய் ஹங்கல்]] அந்தக் காலகட்டத்தில் பீம்சென்னின் சக மாணவராக இருந்தவராவார். ஜோஷி தனது பயிற்சியை பின்னர் ''ஸ்வாமி கந்தர்வாவுடன்'' 1940 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.
 
ஜோஷி 1943 ஆம் ஆண்டு மும்பைக்குமும்பைக்குச் சென்று வானொலி கலைஞராகப் பணியாற்றினார். அங்கு தனது 19 வயதில் நிகழ்ச்சிகளை நடத்தினார். [[கன்னடம்]] மற்றும் ஹிந்தியில் சில பக்திப் பாடல்களைக் கொண்டிருந்த அவரது அறிமுகத் இசைத் தட்டு HMV ஆல் வெளியிடப்பட்டது, அப்போது அவருக்கு வயது 22.
 
பீம்சென்னின் இசையை விமர்சகர்களும் மக்களும் மிகவும் பாராட்டினர். அவரது நிகழ்ச்சிகள் தன்னிச்சையான இயல்பும், துல்லியமான இசைக் குறிப்புகளும் அவரது அசாதாரணமான குரலிசைப் பயிற்சியைப் பயன்படுத்தி அவர் பாடும் தலை சுற்றும் விதத்திலமைந்த ''டான்களும்'' தாளத்தில் அவருக்கு இருந்த மேதைமையும் அவரது புகழுக்கு முக்கிய அம்சங்களாக இருந்தன. அவர் அசாத்தியமான இசைத் தொடர்களையும் டான்களையும் அதிக பிரயத்தனமின்றி தன்னிச்சையாகவே பிரயோகிக்கும் திறமை கொண்டிருக்கக் கூடிய அவர் எப்போதும் இசையில் நீண்ட பயணத்தை மேற்கொள்பவராகவே விளங்கினார். கடினமான கோட்பாடுகளால் கட்டுப்படாதவராக விளங்கிய அவர் அதீத உயரங்களுக்கு பயணித்தும் சில நேரங்களில் விண்மீன்களை அடைந்தும் இசையில் மாயஜாலாங்களைச் செய்தார்.<ref name="stars">{{cite web|url=http://www.hindu.com/fr/2008/11/07/stories/2008110751130100.htm|title=Seeking the stars|publisher=The Hindu|date=2008-11-07|dateaccess=2008-11-18}}</ref> அவர் அரிதாகவே ''சர்கம்'' மற்றும் ''டிஹாய்'' களைப் பயன்படுத்தினார், அவர் பெரும்பாலும் கிரான காரனாவின் பாரம்பரிய பாடல்களையே விரும்பினார். சில ஆண்டுகளில் அவர் அடிக்கடி பாடும் சில ராகங்களில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றார். அவர் அதிகமாக விரும்பும் ராகங்கள் என அறியப்படுபவற்றில், சுத்த கல்யாணி, மியான் கி தோடி, பூரிய தனஸ்ரீ, முல்தானி, பீம்பளாசி, தர்பாரி மற்றும் ராம்கலி ஆகியன அடங்கும். அம்துல் கரீம் கான் மட்டுமின்றி, கேசர்பாய் கேர்க்கர், பேகம் அக்த்தர் மற்றும் உஸ்தாத் அமீர் கான் போன்ற பிற இசைக்கலைஞர்களாலும் அவர் மிகவும் கவரப்பட்டார். பீம்சென் விரும்பிய வெவ்வேறு பாணிகளைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக பிரயோகித்த பின்னர் அவரது தனிப்பட்ட பாணி அவருக்குக் கிடைத்தது.<ref name="words">{{cite web|url=http://www.sakaaltimes.com/2008/11/07201634/A-man-of-few-words.html|title=A man of few words|publisher=Sakaal Times|date=2008-11-07|dateaccess=2008-11-18}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பீம்சேன்_சோசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது