பிரித்தானியச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
==நிகழ்வுகள்==
லுஃப்ட்வாஃபே ஜூலை மாதம் பிரிட்டிஷ் விமானப்படையின் மீது தனது தாக்குத்லைத் தொடங்கியது. அடுத்த மூன்று மாதங்கள் இடைவிடாது நடைபெற்ற இச்சணடையை நான்கு முக்கிய கட்டங்களாகப் பிரிக்கலாம்:
#.ஜுலை 10 - ஆகஸ்ட் 11 : கால்வாய் மோதல்கள்
#ஆகஸ்ட் 12 - ஆகஸ்ட் 23: “கழுகுத் தாக்குதல்” கரையோர விமானத்தளங்களின் மீதான லுஃப்ட்வாஃபே தாக்குதல்கள்
#ஆகஸ்ட் 24 - செப்டம்பர் 6 : பிரிட்டிஷ் விமானப்படை தளங்களின் மீதான் உச்சகட்ட தாக்குதல்கள்
#செப்டம்பர் 6 முதல் : பிரிட்டனின் நகரங்கள் மற்றும் குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள்
 
ஆரம்பத்தில் லுஃப்ட்வாஃபே ஆங்கிலக்கால்வாய் மீது சரக்குக் கப்பல்கூட்டங்களின் மீது தாக்குதல் தொடுத்தன. தங்கள் விமானங்கள் மற்றும் விமானிகளின் பலங்களையும் பலவீனங்களையும், பிரிட்டனனின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அறிந்து கொள்ள ஜெர்மன் தளபதிகள் ஸ்பெர்லேயும் கெச்சல்ரிங்கும் இத்தாக்குதல்களை பயன்படுத்திக்கொண்டனர். இத்தாக்குதல்கள் லுஃப்ட்வாஃபேக்கு பெரும் வெற்றியில் முடிவடைந்தன. சரக்குக் கப்பல்களின் இழப்புகள் அளவுக்கதிகமானதால் பிரிட்டன் ஆங்கிலக் கால்வாயில் சரக்குக் கப்பல்கூட்டங்கள் செல்வதை தடை செய்துவிட்டது. இந்த மோதல்கள் இரு தரப்பினரும் எதிரிகளின் உத்திகளைத் தெரிந்து கொள்ள உதவின. கால்வாய் மோதல்களில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து லுஃப்ட்வாஃபே கரையோற பிரிட்டிஷ் விமானப்படைத் தளங்களை குறிவைக்கத் தொடங்கியது. அட்லரான்கிர்ஃப் (கழுகுத் தாக்குதல்) என்று சங்கேதப்பெயரிடப்பட்ட இத்தாக்குதல் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கியது. [[ராடார்]] நிலையங்கள், கரையோற ஓடுதளங்கள் ஆகியவை குண்டுவீசி தகர்க்கப்பட்டன. ஆகஸ்ட் 24 வரை நடைபெற்ற இத்தாக்குதல்களில் இருதரப்பிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது. யாருக்கும் வெற்றி ஏற்படாத நிலையில் கோரிங் தனது படையினருக்கு வேறொரு உத்தரவைப் பிறப்பித்தார்.
 
{{main|தி பிளிட்ஸ்}}
 
ஆக்ஸ்ட் 24ல் கோரிங்கின் உத்தரவின்படி லுஃப்ட்வாஃபே உள்நாட்டிலுள்ள பிரிட்டிஷ் விமானத்தளங்களை, விமானங்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் தாக்கத் தொடங்கின. அடுத்த இருவாரங்கள் பிரிட்டன் சண்டையின் அதிமுக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. இரு புறமும் பெருத்த சேதம் ஏற்பட்டு, படைகள் சோர்வடையத் தொடங்கின. இருப்பினும் சண்டையின் உக்கிரம் மேலும் தீவிரமடைந்தது. அதுவரை ஹிட்லரின் நேரடி உத்தரவின்படி பிரிட்டனின் மக்கள் குடியிருப்புகள் மீது குண்டு வீசுவதை லுஃப்ட்வாஃபே விமானிகள் தவிர்த்து வந்தனர். ஆனால் தவறுதலாக [[லண்டன்|லண்டனின்]] சுற்றுப்புறங்களில் இருந்த சில விமானதளங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக சர்ச்சில் ஜெர்மனியின் தலைநகரம் [[பெர்லின்]] மீது குண்டு வீச ஆணையிட்டார். இதனால் கோபமடைந்த ஹிட்லர் தனது முந்தைய ஆணையை விலக்கிக் கொண்டார். பிரிட்டனின் நகரங்களை தரைமட்டமாக்கும்படி கோரிங்க்கு உத்தரவிட்டார். இதனால், ஜெர்மனியின் போர் இலக்கு பிரிட்டனின் விமானப்படையை அழிப்பதிலிருந்து பிரிட்டனின் நகரங்களை அழிப்பதற்கு மாற்றப்பட்டது. இம்மாற்றம், பிரிட்டிஷ் விமானப்படைக்கு சாதகாமாகிப் போனது. செப்டம்பர் மாதம் முழுவதும் லண்டன் முதலிய பிரிட்டிஷ் நகரங்கள் கடுமையான குண்டுவீச்சுக்கு உள்ளாகின. ஆனால் பிரிட்டிஷ் விமானத்தளங்கள் தாக்குதலிருந்து தப்பித்தன. இது எதிர்த் தாக்குதல் நிகழ்த்த பிரிட்டிஷ் விமானப்படைக்கு பெரிதும் உதவியது. தாக்குதலில் ஈடுபட்ட லுஃட்ஃபுளோட்டுகளுக்கு (ஜெர்மன் விமானப்படைப் பிரிவுகள்) பேரிழப்பு ஏற்பட்டது. பிரிட்டன் சரணடையவும் இல்லை, அதன் விமானப்படைக்கு பெரும் அழிவு ஏற்படவும் இல்லை. தோல்வியை ஒப்புக்கொண்ட ஹிட்லர் அக்டோபர் 13ல் சீலயன் நடவடிக்கையை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்தார். இத்துடன் பிரிட்டன் சண்டை நிறைவுக்கு வந்தது.
 
==விளைவுகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது