சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
சென்னை மாகாணத்தில் அப்போது இரு முக்கிய கட்சிகள் இருந்தன – இந்தியாவிற்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி வழங்கப் பட வேண்டும் என்று கோரிய [[இந்திய தேசிய காங்கிரசு]], மற்றும் பிராமணரல்லாதோர் நலனுக்காகத் தொடங்கப் பட்ட [[நீதிக்கட்சி]] எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். தேசியவாதக் கட்சியான காங்கிரசு, இரட்டை ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட அரசியல் உரிமைகளால் திருப்தி அடையவில்லை. எனவே தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது. ஆனால் காங்கிரசின் ஒரு பிரிவினர் அதை ஏற்காமல் தனியே பிரிந்து சென்று சுவராஜ் (சுயாட்சி) கட்சி என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். தமிழகத்தில் சீனிவாச சாஸ்திரி, [[சத்தியமூர்த்தி]] ஆகியோர் சுயாட்சி கட்சிக்கு தலைமை வகித்தனர்.
மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீதிக் கட்சி உட்கட்சிப் பூசல்களால் பாதிக்கப் பட்டிருந்தது. நீதிக் கட்சித் தலைவர் தியாகராய செட்டியின் சர்வாதிகாரப் போக்கு கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. செட்டி [[தெலுங்கு|தெலுங்கர்களுக்கு]] மட்டும் பதவி அளித்தார் என்றக் குற்றச்சாட்டை எழுப்பிய [[பி. சுப்பராயன்]], [[ராமலிங்கம் செட்ட்டியார்]], சி. ஆர். ரெட்டி, [[நடேச முதலியார்]] ஆகிய தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டனர்.
==தேர்தல் முடிவுகள்==
|