ஆலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஆலியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்...
(வேறுபாடு ஏதுமில்லை)

11:29, 22 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஆலியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு 298 \ கரந்தை \ நெடுமொழி போர்க்களத்தில் ஓர் காட்சி இந்தப் பாடலில் காட்டப்பட்டுள்ளது. போர்மறவன் போருக்குச் செல்லும் மகிழ்வோடு தேறல்கள்ளைப் பருகிக்கொண்டிருக்கிறான். அவனிடம் அரசன் தன் வாயை மடித்து உரறுகிறான்(=உருமுகிறான்) 'யீ முந்து' இதுதான் அரசனின் உருமல். இந்தக் காட்சியைப் புலவர் 'அரசன் இன்னான்(=கொடியவன்)' என்று கூறிவிட்டுத், தனக்கே கலக்கம் தருவதாகக் குறிப்பிடுகிறார். இந்தப் பாடலில் அரசன் உரறியது நெடுமொழி அன்று. 'முந்துவேன்' என்று போர்மறவன் முன்பே நெடுமொழி கூறியிருக்கவேண்டும். அதுதான் நெடுமொழி. அதனை அறியாத அறியாது அரசன் உரறியதால்தான் புலவருக்குக் கலக்கம் வருகிறது. பாடல் எமக்கே கலக்கம் தருமே தானே
தேறல் உண்ண மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
தேரார் ஆர்எயில் முற்றி
வாய் மடித்து உரறி 'நீ முந்து' என்றானே

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலியார்&oldid=597577" இலிருந்து மீள்விக்கப்பட்டது