பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
கலைக் களஞ்சிய நடைக்கேற்ப மாற்றியுள்ளேன். இங்கு முகம்மதை ஒரு வரலாற்று நாயகனாக மட்டும் அணுக வ
வரிசை 16:
}}
{{Islam}}
'''பத்ர் போர்''' (''Battle of Badr'', {{lang-ar|غزوة بدر}}, [[மார்ச் 17]], [[கிபி]] [[624]]) [[இசுலாமிய வரலாறு|இசுலாமிய வரலாற்றில்]] முஸ்லிம்கள் [[இசுலாம்|இசுலாத்தின்]] விரோதிகளை இராணுவ ரீதியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தெற்கு [[அரேபியா]]வின் (இன்றைய [[சவுதி அரேபியா]]) ஹெஜாஸ் பகுதியில் [[ஹிஜ்ரி]] 2-ஆம் ஆண்டு [[ரமழான்]] பிறை 17-ல் [[வெள்ளிக்கிழமை]] நடைபெற்றது. [[மெக்கா]]வில் இசுலாத்தை எதிர்த்த [[குறைசி]]யர்களுடன் இடம்பெற்ற இப்போர் [[முகம்மது நபி]] அவர்களுக்குக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லிம்கள் பத்ர் யுத்தத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் ஆயுதப் பலத்தோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட ஈமானிய பலமும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. [[குரான்|குர்ஆனில்]] விவரிக்கப்பட்ட ஒரு சில சமர்களில் பத்ர் போரும் ஒன்றாகும்.
 
இப்போருக்கு முன்னரும், முஸ்லிம்களும் குறைசியர்களும் பல சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ர் என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் சமர் ஆகும். முகம்மதுவின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மெக்காவின் படையினரை ஊடறுத்து பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மெக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முஸ்லிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரேபியாவின் ஒரு பலம் வாய்ந்ததும், செல்வச் செழிப்பு மிக்கதாகவும் திகந்த நகரமாக மெக்கா விளங்கியது. முஸ்லிம்களின் இராணுவ பலத்தைவிட மூன்று மடங்கு படையினரை மெக்கா குறைசியர்கள் கொண்டிருந்தனர். முஸ்லிகள் பத்ர் போரில் பெற்ற வெற்றி அரேபியாவில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது [[மெதினா]]வில் பிரிந்திருந்த பிரிவினரிடயே முகம்மது அவர்களின்முகம்மதின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.
 
==போருக்கான காரணம்==
வரிசை 26:
மக்காவின் குறைசியர்கள் நபியவர்களோடு போர் ஒன்றை மேற்கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நபியவர்கள் மதீனாவில் தம்மை திரப்படுத்திக்கொண்டு மக்காவில் இருந்து [[சிரியா]]வை நோக்கிச் செல்லும் குறைசி வணிகர்களைத் தடுத்து நிறுத்தி மக்கா வாசிகளின் பொருளாதாரப் பலத்தை அழித்து விடுவார் என்ற அச்சமாகும்.
 
அத்தோடு நபியவர்களது பிரசாரம் மக்காவையும் புனித [[கஃபா]]வையும் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் எதிரிகள் அவதானித்தனர். முகம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேறும் போது கஃபாவை பார்த்து அழுததையும் எதிரிகளால் மறக்கக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால் முகம்மத் அவர்கள்முகம்மது மதீனாவில் முழுமையாக தமது கால்களை ஊன்றிக்கொள்ள முன்னர் அவரை இராணுவ, பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று எதிரிகள் சிந்தித்தனர்.
 
இசுலாத்தின் மீது எதிரிகளது நடவடிக்கைகளை மிக நுணுக்கமாக அவதானித்து வந்த முகம்மது நபி (ஸல்) அவர்கள் நக்லா எனும் இடத்திற்கு ஒரு கண்காணிப்புக் குழுவை அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்யின் தலைமையில் அமர்த்தினார்கள். எதிரிகளது நடவடிக்கைகளை அவதானித்து வரவேண்டும் என்பதே இவர்களுக்கான கட்டளையாக இருந்தது. எனினும் 12 பேர்களைக் கொண்ட இக்குழுவினர் உமர் பின் கழ்ரமி என்பவருடன் வந்த ஒரு வர்த்தகக் குழுவைத் தாக்கினர். அதனால் கழ்ரமி கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு நபியவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனினும் இஸ்லாத்தின் எதிரிகள் தாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுவதாக முடிவு கட்டி முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித்தனர்.
 
==போர் நிகழ்வு==
வரிசை 34:
மேலே விபரிக்கப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூசூபியான் 50 ஆயிரம் [[தினார்]] பெறுமதி கொண்ட வர்த்தக பண்டங்களோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முகம்மதுவின் ஆதரவாளர்கள் தன்னையும் தாக்கி வர்த்தக பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூசூபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றி செய்தி அனுப்பினான். மக்காவில் இச் செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூசூபியானிடம் இருந்ததனால் இது ஒரு தேசிய பிரச்சினையாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து மதீனா மீது படை நடத்தி வரத் தொடங்கினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 100 முக்கியமான தலைவர்களும் அவர்களில் காணப்பட்டனர். உத்பா இப்னு ரபீ ஆ என்பவரே அக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.
 
ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு 12 ஆவது நோன்பில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறு குழுவினரோடு குறைசியர்களது படை வந்து கொண்டிருந்த தென் மேற்குத் திசையை நோக்கி முன்னேறினார்கள். 16 ஆம் நாள் மதீனாவில் இருந்து 80 [[மைல்]] தொலைவில் இருந்த பத்ர் என்ற இடத்தை வந்து சேர்ந்தார்கள். [[பள்ளத்தாக்கு|பள்ளத்தாக்கின்]] அடுத்த முனையில் எதிரிகள் வந்து சேர்ந்தனர்.
 
மறுநாள் காலை அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு யுத்தம் ஆரம்பமாகியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முகம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மிகவும் உருக்கமான முறையில் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள்புரிந்தார். ''இறைவா உன் தூதரை பொய்யர் என்று நிரூபிக்க ஆணவத்தோடும் ஆயுத பலத்தோடும் இக்குறைசியர் வந்திருக்கின்றனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை இப்போது தந்து விடு. இன்று இந்த சின்னஞ்சிறு குழு அழிந்து விட்டால் இப்பூமியில் உன்னை வணங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.''
 
இவ்வாறு அவருடைய தோளில் இருந்த போர்வை விழும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் நபியவர்களிடம்முகம்மது நபியிடம் வந்து, ‘’அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும் நிச்சயமாக அவன் உங்களுக்கு உதவி செய்வான்,'' என்று கூறி ஆறுதல் படுத்தினார்.
 
இப்போராட்டத்தில் முஹாஜிர் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முஸ்லிம்கள்) தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்துக்குயுத்தத்துதில் முகம் கொடுத்த போது அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கினான்வெற்றியடைந்தனர். இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர். இரத்த உறவுமுறையை விடவும் தங்களின் இஸ்லாமிய கொள்கை அதிக பலம் வாய்ந்தது இஸ்லாமிய கொள்கை என்பதை முஸ்லிம்கள் களத்தில் நிரூபித்தனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பதுருப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது