பாலைக் கௌதமனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: பாலைக் கௌதமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவ... |
No edit summary |
||
வரிசை 11:
ஒரு பாடலில் (21) கடவுளுக்குச் செய்யும் பெரும்பெயர் ஆவுதி, மக்களுக்குச் செய்யும் அடுநெய் ஆவுதி என்னும் வேள்விகளைக் குறிப்பிடுகிறார்.
==== தரும்புத்திரனைப் பாடியது \ புறநானூறு 366 ====
இந்தப் பாடல்களின் சில அடிகள் சிதைந்துள்ளன. பெருங்காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்த இந்தப் பாடலில் நிலையாமை பற்றிப் பேசப்படுகிறது. பாடலில் 'அறவோன் மகனே' என விளிக்கும் தொடர் காணப்படுகிறது. புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் இந்தத் தொடரைக்கொண்டு 'தரும்புத்திரன்' என்னும் பெயரை உருவாக்கியுள்ளார்.
பாடப்பட்ட தரும்புத்திரன் ஒரு வள்ளல். அவன் சோறு வேண்டியவர்களுக்கு மாட்டை வெட்டிக் கறி சமைத்துச் சோறு போட்டான். கள் விரும்பியவர்களுக்குக் கள் தந்தான். பகல் வேளையில் பிறர் முயற்சிகளுக்கு உதவினான். இரவு வேளையில் மறுநாள் செய்யவேண்டியதை எண்ணிப்பார்த்துக்கொளவான். இப்படி அவன் பண்புகள் பாராட்டப்படுள்ளன.
|