'''யாளி''' என்பது [[இந்து]]க் [[கோயில்]]களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினமாகும். இது வியாழம், சரபம் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோவில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. [[தென்னிந்தியா|தென்னிந்திய]]ச் [[சிற்பம்|சிற்பங்களில்]] பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் [[சிங்கம்]] போன்ற உயரினமாகும். இது சிங்கத்தையும் [[யானை]]யையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.
[[படிமம்:Veena.gif|left|thumb|300px|[[வீணை]]யில் யாளி முகம்]]. மதுரை [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலும்]] வேறு சில முருகன் கோவில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாழி போன்று வடிவமைக்கப் பட்ட வாகனங்களில் வருகின்றன.