இல்லறவியல் (திருக்குறள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
placement of TOC, removal of manual link list
→‎இல்வாழ்க்கை: குறள்கள் 41-50 சேர்த்திருக்கிறேன்
வரிசை 7:
===இல்வாழ்க்கை===
----
:'''41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்'''
:'''41.
::'''நல்லாற்றின் நின்ற துணை.'''
::*பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
 
:'''42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்'''
::'''இல்வாழ்வான் என்பான் துணை.'''
::*பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
 
:'''43. தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானொன்றாங்கு'''
::'''ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.'''
::*வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்க்கைக்குரியனவாம்.
 
:'''44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை'''
::'''வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்.'''
::*பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலே தான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
 
:'''45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை'''
::'''பண்பும் பயனும் அது.'''
::*இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
 
:'''46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்'''
::'''போஓய்ப் பெறுவ தெவன்.'''
::*அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.
 
:'''47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்'''
::'''முயல்வாருள் எல்லாம் தலை.'''
::*நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
 
:'''48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை'''
::'''நோற்பாரின் நோன்மை உடைத்து.'''
::*தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பை விட பெருமையுடையதாகும்.
 
:'''49. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்'''
::'''பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.'''
::*பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.
 
:'''50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்'''
::'''தெய்வத்துள் வைக்கப் படும்.'''
::*தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
 
===வாழ்க்கை துணைநலம்===
"https://ta.wikipedia.org/wiki/இல்லறவியல்_(திருக்குறள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது